/indian-express-tamil/media/media_files/2025/04/18/bYpO3pMZat5n0L1WLEWI.jpg)
சுமார் 100 நபர்களில் 90 பேர் தங்கள் உணவை வாயின் ஒரு பக்கத்தில் வைத்து தான் மென்று சாப்பிடுகின்றனர் என்று மருத்துவர் செந்தில் குமார் கூறுகிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறும் அவர், அதற்கான காரணத்தையும் விவரித்துள்ளார்.
நாம் அனைவரும் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் சுயநினைவுடன் மேற்கொள்கிறோம். ஆனால், மென்று சாப்பிடும் வேலையை மட்டும், நாம் அவ்வாறு செய்வதில்லை என்று மருத்துவர் செந்தில் குமார் கூறுகிறார்.
ஏனெனில், சாப்பிடும் நேரத்திற்கு பெரும்பாலானவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நேரம் இல்லை என்று கூறி சுமார் 5 நிமிடங்களில் உணவை சாப்பிட்டு முடிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுவதாக மருத்துவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நிறைய பேர் வாயின் ஒரு பக்கம் வைத்து மட்டுமே உணவை மென்று சாப்பிடுகின்றனர். இப்படி தொடர்ச்சியாக ஒரே பக்கம் சாப்பிடுவதால், தலை ஒரு புறமாக சாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது என்று மருத்துவர் செந்தில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உதாரணத்திற்கு, டம்பெள் கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது கூட, இரு கரங்களிலும் சமமான அளவு தான் செய்கிறோம். அப்படி இல்லாமல் ஒரு கையில் மட்டும் அதிகமாக செய்தால், மற்றொரு கை பலவீனமாக இருப்பதை போன்று தோன்றும்.
ஒரே பக்கமாக மென்று சாப்பிடுவதால், முதல் மற்றும் இரண்டாவது தண்டு எலும்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இது தவிர, தலை வலி, கை வலி, கழுத்துப் பகுதியில் வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சாப்பிடும் போது வாயின் இரண்டு பக்கங்களில் சரியாக மென்று உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் செந்தில் குமார் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.