தினமும் 6 பூண்டு சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் இருக்கிறது. சில்வர் அல்லது இரும்பு கடாயில் நாம் பூண்டை வறுத்துகொள்ள வேண்டும். நாம் பூண்டை நாம் நேரடியாக ஸ்டவ்வில் வைத்து சுடக்கூடாது. பூண்டை நாம் பச்சையாக கூட பூண்டை சாப்பிடலாம், ஆனால் அதில் காரம் அதிகம் மட்டும், அதை சாப்பிடும்போது வாயில் நாற்றம் வீசும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாக பூண்டை சாப்பிடலாம். மதிய நேரத்தில் உணவை எடுத்துகொண்ட பிறகும் சாப்பிடலாம். 3 வேளையும் நாம் சாப்பிடலாம்.
இதை சாப்பிட்ட பின்பு ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடித்தால், ஒரு மணி நேரத்தில் நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இந்நிலையில் இது உடலில் உள்ள கேடான கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளது.
உடலில் உள்ள செல்களை பாதிக்கும் விஷயத்தை எதிர்த்து போராடுகிறது. புற்று நோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்கிறது. இதயநோய் ஏற்படாமல் பார்த்துகொள்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றுகிறது. சோர்வு ஏற்படாமல் பார்த்துகொள்கிறது. இரத்த அழுத்தம், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்களை தடுக்கிறது.
ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், பாலில் பூண்டை கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு பருகினால், இந்த பிரச்சனை குணமாகும். நமது வாழ்நாள் நீட்டிக்க உதவும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் ஒரு மாதம் வரை பூண்டை எடுத்துகொண்டால், உடல் எடை குறைய உதவும்.