இரும்பு சத்தை வைத்துதான் ஹீமோகுளோபின் உருவாக்கப்படுகிறது. இந்த புரத சத்துதான் சிவப்பு ரத்த அணுக்களில் இருந்து, ஆக்ஸிஜன் உடலில் உள்ள எல்லா இடத்திற்கும் எடுத்து செல்கிறது. ஹீமோகுளோபின் குறைந்தால் பல்பேறு சிக்கல் ஏற்படும். தொடர் சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், மார்பில் வலி மற்றும் நிறத்தில் மாற்றம் ஏற்டும். இந்நிலையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, சில பானங்களை குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் சாறு
இதில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுபோல இரும்பு சத்தை உள்வாங்கிக்கொள்ள உதவும். இதனால் இதை நாம் எடுத்துகொள்ளலாம்.
கரும்புச் சாறு
இது மிகவும் இனிப்பாக இருக்கும். அப்படி இருந்தலும், இதில் இரும்பு சத்து மற்றும் மற்ற சத்துகள் உள்ளது. இது இரும்பு சத்தை உடல் எடுத்துகொள்ளும் அளவை அதிகரிக்கிறது.
மாதுளைப்பழ சாறு
இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. வைட்டமின் சி உள்ளது. இந்த இரண்டின் காம்பினேஷன் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்பு சத்தை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது.
சத்து சர்பத்
வறுத்த கொண்டக்கடலையில் மாவு தயாரிக்க வேண்டும். இந்த மாவு 2 டேபிள் ஸ்பூன், சிறிதாக கொத்தமல்லி, வெங்காயம் நறுக்கியது, மிளகு தூள், தண்ணீர், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். இதில் புரத சத்து, இரும்பு சத்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“