உங்களுக்கு எப்போது தோசை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும், வெறும் 15 நிமிஷத்தில் இப்படி தோசை செய்ய முடியும். ரெசிபி இதோ. இதற்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபியும் உள்ளது.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பச்சரிசி மாவு
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
ஒரு கை பிடி கொத்தமல்லி தழை
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் சீரகம்
தேவையான அளவு உப்பு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். தொடர்ந்து அரை ஸ்பூன் மிளகாய் தூள், சீரகம், உப்பு சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தேவைபட்டால் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தேசை சுடலாம். அதுபோல உடனே தோசை சுட்டாலும் நன்றாக இருக்கும்.
சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்
அரை மூடி தேங்காய்
3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
5 பச்சை மிளகாய்
சிறிய அளவு கொத்தமல்லி
2 பல் பூண்டு
சின்ன துண்டு இஞ்சி
புளி
கடுகு கொஞ்சம்
3 வத்தல்
செய்முறை: மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, தண்ணீர் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து அதில் எண்ணெய், கடுகு, வத்தல் சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“