நீங்கள் அவசரமாக கார சட்னி அரைக்க வேண்டும் என்று நினைத்தால், இப்படி செய்து பாருங்க. சுவையும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
7 முதல் 8 பல் பூண்டு
7 வர மிளகாய்
எலுமிச்சை அளவு புளி
15 சின்ன வெங்காயம்
2 பெரிய தக்காளி
கருவேப்பிலை
கடுகு
செய்முறை: ஒரு மிக்ஸியில் பூண்டு, வர மிளகாய், புளி, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்ததும், அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் முதலில் அரைத்த விழுதை சேர்க்கவும். இதை கிளர வேண்டும். தொடர்ந்து அதில் அரைத்த தக்காளி சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அதில் உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான கார சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“