/indian-express-tamil/media/media_files/XGOFYYxrdB9zAloeONzm.jpg)
Actress Parvathy
சினிமா நட்சத்திரங்களைப் போன்ற பளபளப்பான சருமத்தைப் பெற பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டும் என நினைத்துக்கொள்வார்கள். ஆனால், சின்னத்திரை நடிகை பார்வதி எந்தவித கெமிக்கல்களும் இல்லாமல், இயற்கையான முறையில் அழகைப் பராமரிக்க உதவும் 3 எளிய ரகசியங்களை இங்கே பகிர்ந்துள்ளார்.
ஸ்டெப் 1: தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
முதலில், ஒரு பீஸ் தக்காளி எடுத்து, சர்க்கரையில் நல்லா டிப் பண்ணுங்க. இது ஒரு அருமையான ஸ்க்ரப் மாதிரி ஆகிடும். இதை வச்சு முகத்துல மெதுவா ஸ்க்ரப் செய்யுங்க. இப்படி செய்வதன் மூலம், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாகிவிடும்.
ஸ்டெப் 2: உருளைக்கிழங்கு ஸ்க்ரப்
அடுத்தது, உருளைக்கிழங்கை எடுத்து, அதே மாதிரி ஸ்க்ரப் பண்ணுங்க. ஒரு 10 நிமிஷம் கழிச்சு முகத்தை வாஷ் பண்ணிடுங்க. மறுபடியும் உருளைக்கிழங்கை எடுத்து நல்லா ஸ்க்ரப் பண்ணி, அதையும் ஒரு 10 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க.
ஸ்டெப் 3: ஃபேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு (பேசன்), தயிர், அரிசி மாவு, சிறிது உருளைக்கிழங்கு சாறு மற்றும் சிறிது தக்காளி சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இது ஒரு மென்மையான பசை போல இருக்க வேண்டும்.
இதை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கைக் கழுவிய உடனேயே உங்கள் சருமத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பொலிவைக் காணலாம்!
இந்த மூன்று எளிய படிகளைப் பின்பற்றி, நீங்களும் பார்வதியைப் போல பளபளப்பான, புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறலாம். இந்த குறிப்புகளை முயற்சி செய்து பார்த்துவிட்டு, உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.