சிகரெட்டில் வெடி: போதை ஒழிப்பு தினத்தில் கோவை கலைஞரின் விநோத விழிப்புணர்வு

இந்த ஆண்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யூ.எம்.டி. ராஜா, தனது தனித்துவமான படைப்பு மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த ஆண்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யூ.எம்.டி. ராஜா, தனது தனித்துவமான படைப்பு மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore awareness

Coimbatore

ஜூன் 26, சர்வதேச போதை ஒழிப்பு தினம். போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய நாள் இது. இந்த ஆண்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யூ.எம்.டி. ராஜா, தனது தனித்துவமான படைப்பு மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisment

WhatsApp Image 2025-06-26 at 2.11.05 PM

சிகரெட் மற்றும் மது பாட்டில்களை பட்டாசு வெடிகள் போல வடிவமைத்து, "சிகரெட் புகைப்பதும் மது அருந்துவதும் நம்மையே அழித்து விடும்" என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ராஜா. இந்த விழிப்புணர்வு முயற்சி, போதைப்பொருட்களின் கோரப் பிடியில் சிக்குபவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

அரசும், பல்வேறு தனியார் அமைப்புகளும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், ராஜாவின் இந்த கலைப் படைப்பு, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: