சர்வதேச பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்: கோவையில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி - பள்ளி மாணவிகள் பங்கேற்பு

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி - பள்ளி மாணவிகள் பங்கேற்பு

author-image
WebDesk
New Update
Cbe women.jpg

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று (அக்.11) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

Advertisment

Cbe women 1.jpg

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உறுதி வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, பள்ளி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

Cbe women 2.jpg

Advertisment
Advertisements

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை ஆட்சியர் தெரிவித்துக் கொண்டார். 

Cbe women 3.jpg

செய்தி: பி.ரஹ்மான் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: