கரம் மசாலா உணவுக்கு சுவையும், மணமும் மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மை தரக் கூடியதாகவும் உள்ளது. இருப்பினும் கடைகளில் வாங்கும் போது அதில் கெமிக்கல் கலக்க கூடிய வாய்ப்பு இருப்பதால் அதில் சில தீமைகளும் வந்துவிடுகிறது என டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். அவர் கூறுகையில், ஒவ்வொரு ஊர்கள், நாடுகளில் கரம் மசாலா பொருட்கள் சேர்ப்பது தயாரிப்பது வேறுபடுகிறது.
Advertisment
கரம் மசாலாவில் 12 நன்மைகள் உள்ளன. கரம் மசாலா உணவில் சேர்ப்பதால் அலர்ஜி, வீக்கம் போன்றவற்றை தடுக்கலாம். கால் மூட்டு வலி உள்ளவர்களும் இதில் எடுத்து கொள்ளலாம். 2-வதாக கரம் மசாலாவில் டீ செய்து குடிக்கலாம். சளி தொந்தரவுகளை குறைக்கும், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அஜீரண பிரச்சனை வராது. பல மசாலாக்களின் கலவை என்பதால் உடலில் வெப்பத்தை உருவாக்கும். இது உடலில் ஜீரணத்தை ஏற்படுத்தும், சுறுசுறுப்பை கூட்டும்,
4-வதாக இதில் ஏலக்காய், கொத்தமல்லி போன்ற பொருட்கள் சேர்ப்பதால் இதயத்திற்கும் நன்மை தருகிறது. கொழுப்பு அதிகம் படியாமல், மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி இதயத்திற்கு நனமை தருகிறது. அடுத்ததாக கல்லீரனும் ஜீரண மண்டத்துடன் தொடர்புடையது. மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரல் நல்லபடியாக வேலை செய்ய இந்த கரம் மசாலா உதவுகிறது.
Advertisment
Advertisement
பாதிப்பு என்னவென்றால் கரம் மசாலாவில் காரம் இருப்பதால் சிலருக்கு ஒத்துக்காது. அதிகம் எடுத்து கொள்வதால் வாய், வயிறு எரிச்சல் ஏற்படலாம். தோலில் அரிப்பு ஏற்படலாம். அதனால் அளவாக எடுத்து கொள்ளலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news