சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ள நோயாளிகள், ஸ்வீட்டை எடுத்து கொள்வது அவ்வளவு நல்லது இல்லை. சுரைக்காயில் செய்யும் அல்வா, சர்கக்ரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
சுரைக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. இது உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை கொடுக்கிறது. பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பைடோ கெமிக்கல்ஸ் மற்றும் வீக்கத்திற்கு எதிரான சத்துகள், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இவை உடல் உற்பத்தி செய்யும் அழுத்தத்தை வெளியேற்றும். இதனால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இருப்பவர்களுக்கு சுரைகாய் ஒரு நல்ல உணவாக இருக்கும். இதில் பொட்டாஷியம், இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி காம்பிளக்ஸ், வைட்டமின் சி உள்ளது. இதில் குறைந்த அளவிலே கொழுப்பு சத்து உள்ளது. இந்நிலையில் இதில் எப்படி அல்வா செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் நெய், துருவிய சுரைக்காய் 1 ½ கப், 1 கப் வறுத்த ரவை, 1 கப் பால், தண்ணீர், அரை கப் நாட்டு சர்க்கரை , பாதாம் துருவியது.
செய்முறை :
இரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, வறுத்த ரவை, பால், தண்ணீர், நாட்டு சார்க்கரை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தேவைப்படும் போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளரவும். அல்வா பதத்திற்கு வந்ததும் துருவிய பாதாமை சேர்க்க வேண்டும்.
READ IN ENGLISH