தற்போது குளிர் காலம் குறையத்தொடங்கி உள்ளது. வெயில் காலம் முன்பாகவே தொடங்கியதால், தற்போது சளி, வரண்ட தொண்டை, இருமல் ஏற்படுகிறது.
இதை சரி செய்ய இருமலுக்கான சிரப்பை நாம் குடிப்போம். இந்நிலையில் வீட்டில் சில விஷயங்களை செய்து நாம் சரி செய்ய முடியும். இந்நிலையில் எலுமிச்சை சாறில், தேன் கலந்து குடிக்கும்போது இதற்கு தீர்வாக இருக்கிறது. எலிமிச்சையில், தேன் சேர்ந்தால், நமது வரண்ட தொண்டைக்கு நிவாரணம் கொடுக்கும்.
தேனில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. பேக்ட்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் நுரையீரலை பாதிக்கும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
ம்யுக்கஸ்-சை உடைத்து, தொற்று ஏற்படும் விளைவுகளை குறைக்க எலுமிச்சையின் அசிடிக் தன்மை பயன்படுகிறது. இதில் மிளகு இடித்தையும் சேர்க்கலாம். இந்நிலையில் இந்த மிளகு வலி, விக்கம், தொண்டை வலியை குறைக்கும்.
மேலும் இந்த கலவையின் தன்மை, வரண்ட தொண்டைக்கு இதமாக இருக்கும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ம்யூகஸ்-சை உடைக்க உதவும். வரண்ட தொண்டையின் வெளிப்பகுதியை தேனில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள் மற்றும் பேக்ட்ரீயாவிற்கு எதிரான பண்புகள் குணப்படுத்தும். இஞ்சியையும் இதை செய்ய பயன்படுத்தலாம்
எப்படி செய்வது
சின்ன துண்டு இஞ்சியை, 200 எம்.எல் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 1 ஸ்பூன் முழுவதும் தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“