எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்துவது சரியாக இருக்குமா ? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் நாம் தண்ணீர் பயன்படுத்தி அவிக்கும்போது, வேகவைக்கும்போது, வதக்கும்போது இதில் சில நன்மைகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் தண்ணீரை வைத்து நாம் சமைக்கும்போது, குறைந்த வெப்ப நிலையில் சமைப்பதால் உணவில் உள்ள அதன் சத்துகள் அதிகமாக இழக்காமல் இருக்கும்.
நாம் தண்ணீரை பயன்படுத்தி சரியான மசாலாவை உபயோகித்து சமைத்தால், மேலும் உணவில் உள்ள இயற்கையான சுவையால், நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருக்கும்.
மேலும் மசாலா பொருட்கள், புதினா, கொத்தமல்லி வகைகளை நாம் பயன்படுத்தினால், தண்ணீரை வைத்து நாம் சமைத்துவிட முடியும். அப்படி சமைத்தாலும் சுவையாகத்தான் இருக்கும்.
தண்ணீரை வைத்து சமைத்தால், எண்ணெய்யை வைத்து சமைப்பதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. எண்ணெய்யில் சமைப்பது நமது உடலுக்கு நன்மைகளை செய்கிறது. பொறிக்கும் அளவிற்கு எண்ணெய்யை பயன்படுத்தாமல். நாம் சரியான அளவில் எண்ணெய் பயன்படுத்தினால் நன்மைகள்தான் ஏற்படும். குறிப்பாக தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகடோ எண்ணெய், கடுகு எண்ணெய் நாம் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“