டை அடிச்ச மாதிரியே தெரியாது… கரு கரு தலைமுடிக்கு இதை அப்ளை பண்ணுங்க; டாக்டர் நித்யா
உங்கள் தலைமுடியை கருமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடிய இயற்கையான ஹேர் டை மற்றும் ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று விரிவாகக் காண்போம். இதனை மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் நித்யா கூறி உள்ளார்.
உங்கள் தலைமுடியை கருமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடிய இயற்கையான ஹேர் டை மற்றும் ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று விரிவாகக் காண்போம். இதனை மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் நித்யா கூறி உள்ளார்.
டை அடிச்ச மாதிரியே தெரியாது… கரு கரு தலைமுடிக்கு இதை அப்ளை பண்ணுங்க; டாக்டர் நித்யா
இன்றைய காலத்தில் முடி உதிர்தல், இளநரை, பொடுகு மற்றும் வறண்ட கூந்தல் போன்ற பிரச்னைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கின்றன. இதற்கு சுற்றுசூழல் மாசு, உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றம் என பல காரணங்கள் இருந்தாலும், நாம் பயன்படுத்தும் ராசயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கையான வழிமுறைகள் மூலம் இந்த பிரச்னைகளுக்கு எளிதாகவும், நிரந்தரமாகவும் தீர்வு காண முடியும். இந்த பதிவில் உங்கள் தலைமுடியை கருமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடிய இயற்கையான ஹேர் டை மற்றும் ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று விரிவாகக் காண்போம். இதனை மிஸ்டர் லேடீஸ் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் நித்யா கூறி உள்ளார்.
Advertisment
முடி பிரச்னைக்கு மூல காரணம்: நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களும் முடி ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. குறிப்பாக: Hormone Imbalance உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை முடி உதிர்வை ஏற்படுத்தும். வயது அதிகரிப்பது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை முடி ஆரோக்கியத்தை குறைக்கும். உடலில் பித்தம் அதிகரிப்பது இளநரை மற்றும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, இளம் வயதினருக்கு ஏற்படும் Premature Grey Hair இதுவே முதன்மை காரணம்.
கடைகளில் கிடைக்கும் இராசயன சாயங்கள் தற்காலிக தீர்வை அளித்தாலும், நாளடைவில் முடியை மேலும் சேதப்படுத்திவிடும். ஆனால், இந்த இயற்கையான ஹேர் டை உங்கள் முடியை கருமையாக்குவதோடு, முடியின் வேர்க்கால்களையும் பலப்படுத்தும் என்கிறார் மருத்துவர் நித்யா.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
அவுரிப்பொடி (Indigo Powder): 100 கிராம் ( இயற்கையாகவே கருநீல நிறத்தை அளிக்கக்கூடியது)
மருதாணிப்பொடி (Henna Powder): 100 கிராம் (இயற்கை சாயம் மற்றும் குளிர்ச்சி)
கடுக்காய் பொடி (Haritaki Powder): 50 கிராம் (முடி வேர்க்கால்களைப் பலப்படுத்த)
சீரகம் (Cumin Powder): 50 கிராம் (உடல் உஷ்ணத்தை தணிக்க)
திரிபலா சூரணம் (Triphala Churnam): 50 கிராம் (நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்தது – முடி வளர்ச்சிக்கு)
தேங்காய் ஓடு கறி (Coconut Shell Ash): 50 கிராம் (நன்கு சலித்தத)
செய்முறை:
முதலில், அவுரிப்பொடி மற்றும் மருதாணிப்பொடியை சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். (மொத்தம் 200 கிராம்) இந்த கலவையுடன் கடுக்காய் பொடி, சீரகப் பொடி, திரிபலா சூரணம் மற்றும் தேங்காய் ஓடு கறி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மொத்த பொடியையும் ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவையான அளவு பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாட்டு மாதுளை பழத்தின் தோலை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, 4 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் ஒரு கிளாஸாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த மாதுளை தோல் கஷாயம் சூடாக இருக்கும்போதே, எடுத்து வைத்துள்ள பொடியில் சிறிது சிறிதாக ஊற்றி, கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். மிகவும் திக்காக இல்லாமல், தலையில் தடவும் பதத்திற்கு கலந்து, இரவு முழுவதும் அப்படியே ஊற விடவும். காலையில், இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் படும்படி, ஒவ்வொரு பகுதியாக பிரித்து நன்கு தடவவும். குறைந்தது 3 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைக்கு குளிக்கவும்.
முக்கிய குறிப்பு: இந்த ஹேர் டை பயன்படுத்திய பிறகு ஷாம்பு போட்டு குளித்தால், சாயத்தின் முழுமையான பலன் கிடைக்காது. எனவே, இயற்கையான ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்துவது சிறந்தது என்கிறார் மருத்துவர் நித்யா.
இயற்கையான ஷாம்பு: கடைகளில் விற்கும் ஷாம்புகளில் உள்ள சல்பேட் போன்ற இராசயனங்கள் முடியை வறட்சியாக்கி, உடைந்து போகச் செய்யும். அதற்கு மாற்றாக இந்த இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
சீயக்காய்
நெல்லிக்காய்
பூவந்திக்கொட்டை (Soapnut)
செய்முறை: சீயக்காய், நெல்லிக்காய் மற்றும் பூவந்திக்கொட்டை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில், இந்த கலவையை தண்ணீர் சுமார் 400ml ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும். பின்னர், கலவையை வடிகட்டி, அந்த தண்ணீரை தலைக்கு குளிக்க பயன்படுத்தவும். இது தலையில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு மற்றும் சிக்கலை நீக்கி, முடியை மென்மையாக்கும்.
பலன்கள்: இந்த இயற்கை ஹேர் டை மற்றும் ஷாம்புவை தொடர்ந்து பயன்படுத்தும் போது, முடி உதிர்தல் குறையும், இளநரை பிரச்சனை படிப்படியாக நீங்கும். முடி வறண்டு போவது, நுனி முடி பிளவுபடுவது (Split Ends) மற்றும் முடி நடுவில் உடைவது போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். முதல் முறை ஹேர் டை போடும்போது, சிலருக்கு முழுமையான நிறம் கிடைக்காமல் லேசான செம்பட்டை நிறம் தெரியலாம். அப்படி இருந்தால், அடுத்த நாளும் இதே முறையை பின்பற்றவும். இரண்டு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல கருமை நிறம் கிடைக்கும். உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதுடன், இந்த இயற்கை முறைகளையும் பின்பற்றினால் சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.