பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருமாலின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம்.
அந்தவகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 அன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
இந்த புனித நாளில், மக்கள் அதிகாலையில் குளித்து, பக்தி பாடல்கள் பாடி, மந்திரங்களை உச்சரித்து, நடனமாடி கிருஷ்ணரை வணங்குகிறார்கள். மேலும், குழந்தை கிருஷ்ணரின் சிலைகளை கழுவி, புத்தாடை அணிவித்து, தொட்டிலில் வைப்பார்கள்.
/indian-express-tamil/media/media_files/lHhbrG1YH1vlP3lbgMy3.jpg)
அன்று , குழந்தை கண்ணனை வர வேற்கும் விதமாக, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக் கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்வர்.
கிருஷ்ண ஜெயந்தித் திருநாளன்று, எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ... அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து, சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.
கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும்.
வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/utRa1cdsgobAjFDhpCBX.jpg)
பூஜை நேரம்
இந்து நாட்காட்டியின்படி, ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடையும். ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது.
எனவே புதன்கிழமை மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட உகந்த நேரம் ஆகும்.
இந்த நல்ல நாளில் கிருஷ்ணரைக் கொண்டாடுவோம்.
கண்ண பரமாத்மாவை உங்களின் பக்தி எனும் கயிற்றால் கட்டிப் போடுங்கள். குளிர்ந்த கண்ணன், நமக்கு அவனின் அருள் மழையைப் பொழிவான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“