/tamil-ie/media/media_files/uploads/2018/11/japan-youth-marry-doll-2.jpg)
japan youth marry doll, ஜப்பான்
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வாலிபர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
சிறிய வயதில் குழந்தைகள் பலரும், பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து விளையாடுவார்கள். ஆனால் டோக்கியோவில் ஒரு இளைஞர் பொம்மையையே திருமணம் செய்துகொண்டார் என்று சொன்னால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். ஆனால் இந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் இருக்கே...
ஜப்பான் : பொம்மையை திருமணம் செய்த இளைஞர்
நாம் சாதாரணமாக ஆண்-பெண் திருமணத்தை கேள்விபட்டிருப்போம் தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் ஆண் - ஆண், பெண் - பெண், ஆண் - மூன்றாம் பாலினத்தவர் திருமணம் கூட சகஜமாகி வருகிறது. ஆனால் டோக்கியோவை சேர்ந்த வாலிபர் இந்த லிஸ்ட்லையே இல்லாத அளவுக்கு விநோத திருமணத்தை செய்துள்ளார்.
டோக்கியோவை சேர்ந்த ஹரிகோ என்ற என்ற வாலிபருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. ஆனாலும் திருமண ஆசை இருந்தது. இதனால் பெண் வடிவிலான ஒரு பொம்மையை காதலித்து வந்தார். இதையே திருமணமும் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி சமீபத்தில் அந்த பொம்மைக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார். இனி நான் சந்தோஷமாக இருப்பேன் என ஹரிகோ மகிழ்ச்சியிடன் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.