/indian-express-tamil/media/media_files/2025/06/18/white jasmine flower-c56188c1.jpg)
Jasmine Aloe Vera Natural fertilizer Gardening Plant care
மல்லிகை செடிகளை வீட்டில் வளர்ப்பது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. செடிகள் இலைகளுடன் வளர்ந்தாலும் பூக்கள் பூப்பதில்லை. பொதுவாக மல்லிகை செடிகள் வாடிப்போவது, செடிகளின் வேர்களைப் பூச்சிகள் தாக்குவது, புதிய கிளைகள் வளராமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை நாம் சந்திப்போம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரு அருமையான இயற்கை உரம் பயன்படுத்தலாம்.
இந்த உரம் வேறொன்றும் இல்லை, நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் கற்றாழைதான் (அலோ வேரா). கற்றாழையை ஒரு முறை பயன்படுத்தினால் போதும், உங்கள் மல்லிகைச் செடியில் பூக்கள் குலுங்க ஆரம்பிக்கும். கற்றாழைச் செடியில் இருந்து ஒரு துண்டை வெட்டி எடுத்து அதைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மல்லிகை செடியின் வேரைச் சுற்றியுள்ள மண்ணை நன்றாகக் கிளறி விட வேண்டும். பின்னர், நறுக்கிய கற்றாழைத் துண்டுகளை மண்ணில் தூவி விட வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம், செடி வாடிப்போகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், புதிய கிளைகள் துளிர்க்கும், மேலும் வேர்களைப் பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும்.
மேலும், இந்த இயற்கை உரம் மண்ணில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வெயிலில் இருக்கும் செடிகளுக்குப் பெரிய உதவியாக இருக்கும். இந்த உரத்தைப் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். மண்ணில் ஈரப்பதம் இல்லையென்றால், உரம் இட்ட பிறகு செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது அவசியம்.
இந்த எளிமையான வழியைப் பின்பற்றினால், உங்கள் மல்லிகைச் செடியிலும் பெரிய, ஆரோக்கியமான பூக்கள் கொத்து கொத்தாகப் பூப்பதைக் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.