Advertisment

மல்லிகை பூ கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்க சிம்பிள் டிப்ஸ்! தவறாமல் ஃபாலோ பண்ணுங்க மக்களே!

கொத்துக் கொத்தாக மல்லிகையை பூத்துக் குலுங்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதும் மிக எளிதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Jasmine

மல்லிகை பூ அதிகமாக பூப்பதற்கு இயற்கையான முறையிலேயே உரம் தயாரிக்க முடியும். இதற்கான கரைசலை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கலாம். இதனால் பெரிய அளவில் செலவும் ஏற்படாது.

Advertisment

வீட்டில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு அதன் தோலை குப்பையில் தான் பெரும்பாலும் போடுவோம். ஆனால், இந்த கரைசல் செய்வதற்கு மூலப்பொருளே எலுமிச்சை தோல் தான். அதனால், சுமார் 4 அல்லது 5 எலுமிச்சை தோலை சேகரித்துக் கொள்ளலாம். 

இந்த எலுமிச்சை தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 3 நாட்களுக்கு நன்றாக ஊற வைக்க வேண்டும். அவ்வப்போது இந்த தண்ணீரை குலுக்கிக் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு பின்னர், இதன் சாறை தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும்.

இப்போது, எலுமிச்சை தோல் ஊறவைத்த தண்ணீருடன் கூடுதலாக 2 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இப்படி சேர்த்தால் மல்லிகை பூச்செடிகளுக்கான உரம் தயாராகி விடும். இந்த உரத்தை செடிகளின் இலைகள் மீது நன்றாக தெளித்து விடலாம். இவை செடிகளின் வளர்ச்சியை தூண்டுவதுடன், செடிகளில் இருக்கும் பூச்சிகளையும் விரட்டி விடும்.

Simple and beginners tips for home gardening Terrace Garden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment