மல்லிகை பூ கொத்து கொத்தா பூக்கும்… இந்த கரைசல் மட்டும் கொடுத்து பாருங்க!

மல்லிகைச் செடிகள் வெயில் காலத்தில் நன்கு பூக்கும். பூத்து முடிந்ததும் கிளைகளை கத்தரித்து, மண்ணைக் கிளறி, தேவையான உரமிட்டால் தொடர்ந்து 4 அறுவடைகள் வரை எடுக்கலாம். இதற்கு நாம் பார்த்துப் பார்த்து உரமிட வேண்டும்.

மல்லிகைச் செடிகள் வெயில் காலத்தில் நன்கு பூக்கும். பூத்து முடிந்ததும் கிளைகளை கத்தரித்து, மண்ணைக் கிளறி, தேவையான உரமிட்டால் தொடர்ந்து 4 அறுவடைகள் வரை எடுக்கலாம். இதற்கு நாம் பார்த்துப் பார்த்து உரமிட வேண்டும்.

author-image
WebDesk
New Update
Organic Fertilizer

மல்லிகை பூ கொத்து கொத்தா பூக்கும்… இந்த கரைசல் மட்டும் கொடுத்து பாருங்க!

மாடித்தோட்டம் அமைத்து செடிகளை வளர்ப்பது பலரின் விருப்பம். செடிகள் பூத்துக் குலுங்குவதைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும். நல்ல உரம், பராமரிப்பு, சூரிய ஒளி என அனைத்தும் கொடுத்தாலும், சில சமயம் செடிகள் இலைகளை மட்டுமே வளர்த்து, பூக்கள் விடுவதில்லை. குறிப்பாக மல்லிகைச் செடிகள் வெயில் காலத்தில் நன்கு பூக்கும். பூத்து முடிந்ததும் கிளைகளை கத்தரித்து, மண்ணைக் கிளறி, தேவையான உரமிட்டால் தொடர்ந்து நான்கு அறுவடைகள் வரை எடுக்கலாம். தரையில் வளரும் செடிகள் இயற்கையாகவே மண்ணிலிருந்து சத்துக்களை பெற்றுக்கொள்ளும். ஆனால், தொட்டியில் வளரும் செடிகளுக்கு நாம் பார்த்துப் பார்த்து உரமிட வேண்டும். அப்படியும் சில சமயம் செடிகள் துளிர்களை மட்டுமே விட்டு, மொட்டுக்கள் வைக்காமல் போகலாம். இந்தச் சிக்கலுக்கு பொன்செல்வி லைஃப்ஸ்டைல் என்ற யூடியூப் சேனலில் அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

Advertisment

மொட்டுக்கள் வைக்காத செடிகளுக்கு சிறப்பு கரைசல்:

மல்லிகைச் செடிக்கு இலைகளை நீக்கி, திட உரம், வாழைப்பழம் மற்றும் முருங்கைக்கீரை கரைசல் கொடுக்கப்பட்டது. செடி உருகி துளிர்கள் வந்தாலும், மொட்டுக்கள் வரவில்லை. இதுபோன்ற சமயங்களில், செடியை மீண்டும் கத்தரித்து, மண்ணைக் கிளறி புதிய உரம் கொடுக்க வேண்டும். மேல் பகுதியிலிருந்து 2 இலைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கத்தரிக்கலாம். இந்த முறை இலைகளை நீக்கத் தேவையில்லை. இந்த முறை, செடிகள் பூக்காத பிரச்னைக்கு சிறப்பு கரைசல் தயாரிக்கப்பட்டது. இது இதற்கு முன் சோதனை செய்யப்படாத புதிய முறையாகும். 

சிறப்பு உரம் - தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

இந்தக் கரைசலைத் தயாரிக்க வெளிப் பொருட்கள் எதுவும் தேவையில்லை. நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம். வாழைப்பழத் தோல் பொட்டாசியம் நிறைந்தது, பூ பூப்பதற்கு மிகவும் உதவும். தயிர் லாக்டோபேசிலஸ் பாக்டீரியாக்களைக் கொண்டது, பொருட்களில் உள்ள சத்துக்களை பல மடங்கு அதிகரிக்கும். வெந்தயம் இரும்புச்சத்து உட்பட பல நுண் சத்துக்கள் நிறைந்தது. டீத்தூள் டானிக் ஆசிட் என்ற அமிலம் உள்ளது. (பயன்படுத்தாத டீத்தூள் சிறந்தது). வெல்லம் நுண்ணுயிர் பெருக்கத்தை விரைவுபடுத்தும். (நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்க்கலாம், வெள்ளைச் சர்க்கரை கூடாது). அரிசி கழுவிய தண்ணீர் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

செய்முறை:

வாழைப்பழத் தோலுடன் சற்றுக் கெட்டுப்போன தயிரை நிறைய சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்க்கவும் (முழுமையாகத் தூள் செய்யத் தேவையில்லை). டீத்தூள் மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும். அரிசி கழுவிய தண்ணீர் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்கு கலந்து, மூடி போட்டு, நிழலான இடத்தில் 4 நாட்கள் வைக்கவும். தினமும் ஒரு முறை கலக்கி விடுவது நல்லது. 

செடிகளுக்கு உரம் இடும் முறை:

4 நாட்களுக்குப் பிறகு, உரம் தயாராகிவிடும். செடிகளை கத்தரித்து, மண்ணை நன்கு கிளறி விடவும். எந்த உரம் கொடுத்தாலும் மண்ணைக் கிளறிய பின்பே கொடுக்க வேண்டும். இது சத்துக்கள் செடியைச் சென்றடையவும், மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கவும் உதவும். தயாரித்த கரைசலுடன் 1:5 என்ற விகிதத்தில் (2 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்) தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். வாழைப் பழம் தோல்களை எடுத்து கம்போஸ்ட் தொட்டியில் சேர்க்கலாம் அல்லது மண்ணில் புதைத்து விடலாம். இந்தக் கரைசலை பூச்செடிகள், பழச்செடிகள், காய்கறிச் செடிகள் என அனைத்து வகையான செடிகளுக்கும் பயன்படுத்தலாம். உரம் மிகவும் கெட்டியாக இல்லாமல், நீர்த்த நிலையில் கொடுக்க வேண்டும். இந்தக் கரைசலைக் கொடுத்த 10 நாட்களில் செடிகளில் நிறைய துளிர்கள் வரத் தொடங்கின. இந்த முறை துளிர்கள் வரும்போதே மொட்டுக்களும் சேர்ந்தே வரும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: