ஜூலை டூ டிசம்பர் செம சீசன்; மல்லிகை செடி பூத்து குலுங்க உளுந்து வைத்து இந்த உரம் கொடுங்க!

வீட்டில் தயாரிக்கப்படும் இந்த உரம், உங்கள் மல்லிகைச் செடியை செழிப்பாக வளர வைத்து, டிசம்பர் மாதம் வரை கொத்து கொத்தாகப் பூக்களைப் பூக்க வைக்கும்.

வீட்டில் தயாரிக்கப்படும் இந்த உரம், உங்கள் மல்லிகைச் செடியை செழிப்பாக வளர வைத்து, டிசம்பர் மாதம் வரை கொத்து கொத்தாகப் பூக்களைப் பூக்க வைக்கும்.

author-image
WebDesk
New Update
Jasmine plant care growing fertilizer blooming tips

Jasmine plant care growing fertilizer blooming tips

உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் மல்லிகைப் பூச்செடி இருக்கிறது, ஆனால் அதில் பூக்கள் குறைவாக இருக்கிறதா? செடி வளராமலேயே இருக்கிறதா? அப்படியானால், இந்த வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய உரத்தை (Homemade Fertilizer) ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள்.

Advertisment

மல்லிகைப் பூச்செடிக்கு சிறந்த உரம்!

இந்த உரம் செடியின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், நிறைய புதிய கிளைகளையும் உருவாக்கி, கொத்து கொத்தாகப் பூக்க உதவுவதோடு, செடியின் மண்ணையும் வளமாக்குகிறது.

மல்லிகைப் பூச்செடிகள் பொதுவாக, ஜூலை முதல் டிசம்பர் வரை அதிகப் பூக்களைப் பூக்கும். உங்கள் வீட்டுச் செடிகள் பூக்கும் பருவத்திலும் உறக்க நிலைக்குச் செல்லாமல், டிசம்பர் மாதம் வரையிலும் நிறைய பூக்களைத் தருவதற்கு இந்த உரம் நிச்சயம் உதவும்.

உரம் தயாரிக்கும் முறை:

Advertisment
Advertisements

ஒரு கைப்பிடி அளவு உளுந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் போட்டு மாவு போல அரைத்துக்கொள்ளுங்கள். பெரிய மல்லிகைப் பூச்செடிக்கு, அரைத்த இந்த மாவில் ஒரு ஸ்பூன் எடுத்துப் பயன்படுத்துங்கள். இத்துடன், அரை ஸ்பூன் ஃப்ரெஷ் டீ தூளைச் சேர்த்து, மாதம் ஒருமுறை செடிக்கு உரமிடுங்கள்.உங்கள் செடி சிறியதாக இருந்தால், இந்த அளவைக் குறைத்து உரமிடுங்கள்.

குறிப்பு: இந்த உரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, செடியின் காய்ந்த கிளைகளை வெட்டிவிடுங்கள். இது, செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றி, உங்கள் வீட்டு மல்லிகைப் பூச்செடியில் தினமும் புதிய பூக்களைப் பறித்து மகிழுங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: