Advertisment

பிரக்கியா… இதோட நிறுத்துக்கோ… தாய் சாபம் பொல்லாதது: ஜேஸ்ருதி டீச்சர் புது வீடியோ

யூடியூபில் பிரபலமாக உள்ள ஜேஸ்ருதி தற்போது வெளியிட்ட வீடியோ பேச்சு பொருளாக மாறி உள்ளது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யூடியூபில் பிரபலமாக உள்ள ஜேஸ்ருதி தற்போது வெளியிட்ட வீடியோ பேச்சு பொருளாக மாறி உள்ளது.

Advertisment

யூடியூப் சேனல் வைத்திருந்த பிரக்கிய என்பவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் பாடல் பாடி, நடனம் ஆடுவார், மேலும் தன்னது வரையும் திறமைகளை காண்பிப்பார்.  பிரக்கியவிற்கு திருமணம் செய்து வைக்க, அவரது அம்மா ஜேஸ்ருதி முடிவு செய்தபோது, அவர் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது தந்தையும் சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் இணைந்தார்கள். ஆனால் சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார்கள். சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள் என்று ஜேஸ்ருதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சமீப காலத்தில் அவர் தனக்கு ஒரு சேனலை ஆரம்பித்து அதில்,கதைகள் சொல்வது, தனது வாழ்க்கையின் வலியை சொல்வது என்று பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தன்னை அடித்து துன்புருத்திதான் வீட்டில் இருந்து அனுப்பினார்கள் என்றும், தனது கணவர் அதாவது பிரக்கியாவின் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பியவர்களிடம் தற்போது நன்றாக பிரக்கியா  பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தற்போது விவகாரத்து வாங்குவதற்கும் பிரக்கியாதான் காரணம் என்று கூறுகிறார்.

ஆனால் பிக்கியா இதை முற்றிலும் மறுக்கிறார். அவரது அம்மா அவரை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பிடித்த விஷயங்களை செய்ய விடாமல் தடுப்பதாகவும் கூறுகிறார். பழைய மாதிரி அவர்களுடன் ஒன்றாக வாழ முடியாது. அதை பற்றி பேச வேண்டும் என்று பிரக்கியா தெரிவித்துள்ளார். மேலும் அப்பாவும் அம்மாவும் அவர்கள் சொந்த பிரச்சனைக்குதான் விவாகரத்து செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜேஸ்ருதி வெளியிட்ட வீடியோவில் பிரக்கியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். மரியாதை தெரியாமல் பேசுகிறார் என்றும் முடியாத காலை வைத்து இந்த குடும்பத்திற்காக உழைத்தற்கு இது எனக்கு தேவையா ? என்று கேட்டுள்ளார். கணக்கு பாடத்தில் தோல்வியடைந்ததாகவும், மீண்டும் அரியஸ் எழுதிதான் பாஸ் ஆனார் என்றும் பல்கலைக்கழத்தில் முதல் மதிப்பெண் ஒன்றும் பிரக்கியா எடுக்கவில்லை என்று கூறி உள்ளார். சொந்த குழந்தைக்கு சாபம் விடக்கூடாது என்பாதால் வாயை மூடிக்கு கொண்டு இருக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment