ஒரு உருண்டை புளி போதும்... பூஜை சாமான்கள் புதுசு மாதிரி பளபளக்கும்; இப்படி ட்ரை பண்ணுங்க!

சில சமயம் பூஜை பாத்திரங்களை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அப்போது, அந்த அழுக்கு திடமாக ஒட்டிக்கொண்டு, சாதாரண சோப்பு மற்றும் நீரால் எளிதாக கழுவ முடியாது.

சில சமயம் பூஜை பாத்திரங்களை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அப்போது, அந்த அழுக்கு திடமாக ஒட்டிக்கொண்டு, சாதாரண சோப்பு மற்றும் நீரால் எளிதாக கழுவ முடியாது.

author-image
Mona Pachake
New Update
download - 2025-10-07T145737.912

பூஜை பாத்திரங்களைத் தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது, வீடு முழுவதும் நேர்மையும் நேர்த்தியும் நிலவ உதவுகிறது என நம் மூதாதைகள் கூறி வந்துள்ளனர். பெரும்பாலும், பூஜைக்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் பித்தளை, செம்பு, அல்லது வெண்கலம் போன்ற உலோகங்களால் ஆனவைதான். இந்த வகையான பாத்திரங்களில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது, சாம்பிராணி அல்லது குங்குமம் போன்ற திரவங்களை ஊற்றுவது போன்ற காரணங்களால், அவை விரைவாகவே அழுக்காகி, மேல் மேல் திரவியங்கள் படிந்து மங்கலாகிவிடும்.

Advertisment

அதனால்தான், இந்தப் பாத்திரங்களை சுத்தம் செய்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் அனைத்தையும் சுத்தம் செய்ய முயற்சிக்கும்போது, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் இடுப்பு வலிக்கும் அளவிற்கு நம்மை களைப்பாக ஆக்கிவிடும். பழைய எண்ணெய், கரி படிந்து மாறி நிறம் மங்கிய பாத்திரங்களைத் துலக்கும் போது, கழுவும் வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

Screenshot 2025-10-07 145210

இதற்குப் பதிலாக, வாரம் ஒருமுறை இந்த பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தால், சுலபமாக கழுவ முடியும். மையமான கழுவும் வேலைகளில் நேரமும் மிச்சம் ஆகும், பாத்திரங்களும் எப்போதும் பளபளப்புடன் இருக்கும். இதனால் பூஜை அறையின் ஒட்டுமொத்த தோற்றமும் நன்றாகவே இருக்கும்.

நீண்ட நாட்கள் கழுவாமல் விட்டிருந்தால்?

சில சமயம் பூஜை பாத்திரங்களை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அப்போது, அந்த அழுக்கு திடமாக ஒட்டிக்கொண்டு, சாதாரண சோப்பு மற்றும் நீரால் எளிதாக கழுவ முடியாது. இந்த சூழ்நிலையில், வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கை பொருட்களை நீரில் கலந்து உபயோகித்தால், அந்த பாத்திரங்கள் சுலபமாக சுத்தமாகி, புது போல் மின்னத் தொடங்கும்.

Advertisment
Advertisements

ஒரு சிம்பிள் டிப்!

இத்தகைய புதிய சுத்தம் செய்யும் உத்திகள், இல்லம் முழுவதும் புத்துணர்வையும், நேர்த்தியையும் ஏற்படுத்தும். அதேசமயம், நம் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்குமான வழிகளை பின்பற்றும் பழக்கமாகவும் இது அமையும். 

tamarind

அதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். முதலில் கொஞ்சம் புளி எடுத்து கொள்ள வேண்டும். அந்த புளியை  நன்கு கரைத்து அதில் கொஞ்சம் உப்பு மற்றும் விம் ஜெல் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். இப்போது இந்த கரைசலை வைத்து உங்கள் சாமி பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவினால், கண்டிப்பாக நிமிடங்கள் பளீச்சென்று ஆகிவிடும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: