காச்சிக்குடா மற்றும் மதுரை, நாகர்கோவில் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
காச்சிக்குடா – மதுரை சிறப்பு விரைவு ரயில் (எண்: 07191)
வாரந்தோறும் திங்கட்கிழமைகள் மாலை 8.30 மணிக்கு காச்சிக்குடாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 9 முதல் ஜூலை 28 வரை இயக்கப்படும்.
மதுரை – காச்சிக்குடா சிறப்பு விரைவு ரயில் (எண்: 07192)
வாரந்தோறும் புதன்கிழமைகள் காலை 10.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 11 முதல் ஜூலை 30 வரை இயக்கப்படும்.
காச்சிக்குடா – நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07435)
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகள் காலை 7.35 மணிக்கு காச்சிக்குடாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 13 முதல் ஜூலை 11 வரை இயக்கப்படும்.
நாகர்கோவில் – காச்சிக்குடா சிறப்பு விரைவு ரயில் (எண்: 07436)
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜூன் 15 முதல் ஜூலை 13 வரை இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.