/indian-express-tamil/media/media_files/tPyMN4RIUZt9fmJYdnzZ.jpg)
உடல் நலக் குறைவு, நோயில் இருப்பவர்கள் தான் கஞ்சி சாப்பிட வேண்டும் என்ற மனநிலை இன்றும் பல பேருக்கு உள்ளது. ஆனால் ஹோட்டல்களில் வழங்கப்படும் சூப்-ஐ பலர் பேர் வாங்கி சாப்பிடுவார். உண்மையில் இந்த இரண்டிற்கும் வேறுபாடு இல்லை. கஞ்சி என்று பெயர் சொல்லாமல் கொடுக்கிறார்கள் அவ்வளவு தான்.
உண்மையில் கஞ்சி மிகச் சிறந்த உணவு என சித்த மருத்துவர் சிவராமன் கூறி விளக்கி உள்ளார். அவர் கூறுகையில், ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப கஞ்சி உணவு தயாரிக்கப்படுகிறது. எ.கா. பெண்கள் மாத விடாய் காலத்தில் உளுந்தங்கஞ்சி செய்து கொடுப்பர். ஒரு கப் அரிசி, மூன்றில் ஒரு பங்கு தொலி உளுந்து போட்டு காய்ச்சி கடைசியில் தேங்காய், சீரகம், உப்பு சேர்த்து தயார் செய்யப்படும். இந்த கஞ்சிக்கு எள்ளு துவையல், பிரண்டை துவையல் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம். இந்த உளுந்தங்கஞ்சி உடலுக்கு அவ்வளவு நல்லது. குறிப்பாக பெண்களுக்கு நல்லது தருகிறது. கருப் பை வளர்ச்சிக்கு உதவுகிறது.
அதே போல் குழந்தை எடை குறைவாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நேந்திரபழக் கஞ்சி கொடுக்கலாம். நேந்திரபழ மாவு இப்போது கடைகளில் கிடைக்கிறது. இந்த மாவில் பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொடுத்தால் நல்ல உடல் எடை கூடும்.
மேலும், நிறைய கஞ்சிகள் உடல் நலத் தேவைக்கு ஏற்றால் போல் கொடுக்கப்படுகிறது. வயிற்கு போக்கு சரி செய்ய ஆரோடூட் கஞ்சி கொடுக்கலாம். எளிமையாக ஒவ்வொரு வீட்டில் வைத்திருக்க வேண்டியது சத்துமாவு கஞ்சி. வரகு அரிசி, சோளம், கம்பு, பாசிப் பருப்பு, கொண்டை கடலை, முந்திரி, வறுத்த உளுந்து, பொட்டுக் கடலை போன்றவைற்றை சேர்த்து அரைத்து சத்துமாவு கஞ்சி செய்யலாம்.
தானியங்கள், பயிர்கள் இருப்பதால் வாயுஏற்படாமல் இருக்க கொஞ்ம் சுக்கு சேர்த்து அரைத்து வைக்கலாம். இந்த கஞ்சியை காலையில் குடிக்கும் போது உடல் ஊட்டம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என மருத்துவர்
சிவராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us