ஒரு முறை காஞ்சிபுரம் இட்லி, இப்படி செய்யுங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1.பச்சரிசி- 1 கப்
2. புழுங்கலரிசி -1 கப்
3.உளுத்தம் பருப்பு -1 கப்
4.புளித்த தயிர்- 1 கப்
5.மிளகு -1 ஸ்பூன்
6.சீரகம் -ஸ்பூன்
7.பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன் சிறிதளவு
8.நெய் 2 ஸ்பூன்
9.கறிவேப்பிலை
10.உப்பு
செய்முறை: முதலில் அரிசியையும், ரவையும் மாவை போல் அரைப்பதற்கு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு, அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 8 மணி நேரம் புளித்து போக விடவும்.
அதன் பின்னர், குவளை போன்ற பாத்திரம் அல்லது அலுமினிய இட்லி தட்டில் வாழை இலையை வைத்து அதன் மேல் நெய்யை தடவ வேண்டும். பின்பு, மாவில் மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து நன்கு கலந்து தட்டில் ஊற்ற வேண்டும். பின்பு, பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இப்போது இட்லியை எடுத்து, புதினா சட்னி, தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறினால் போது 5 நிமிடத்தில் எல்லாமே தீர்ந்து விடும்.