ஆயுர்வேதத்தின்படி, உங்கள் தலைமுடி பிரச்சனைகளைச் சமாளிக்க கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இதில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், இது முடி உதிர்வைக் குறைக்க உதவுவதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.
Advertisment
கரிசலாங்கண்ணியின் நன்மைகள்
இந்த அதிசய மூலிகையின் நன்மைகளைப் பட்டியலிட்ட டாக்டர் அஞ்சலி, கரிசலாங்கண்ணி உச்சந்தலையிலும், மயிர்க்கால்களிலும் இரத்த ஓட்டத்தை திறம்பட அதிகரிக்கிறது, இது இரத்த விநியோகத்தின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு வேர்களை வளப்படுத்துகிறது என்று கூறினார். இதனால் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
வீட்டிலேயே கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
Advertisment
Advertisements
நீங்கள் வீட்டிலேயே எளிதாக கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்கலாம். அதற்கு உங்களுக்கு தேவையானது சில கரிசலாங்கண்ணி இலைகள் அல்லது அதன் பொடி
இலைகளைப் பொடியாக நறுக்கி, ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் கடாயில் போடவும். மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து, எண்ணெயை ஆற விடவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைக்கவும். சில நாட்களுக்குப் பிறகு, எண்ணெயை வடிகட்டவும். இப்போது இலைகள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை எண்ணெயில் முழுமையாக வெளியிட்டிருக்கும்.
பயன்படுத்தும் முறை:
வாரத்திற்கு இரண்டு முறை, இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி இரவு முழுவதும் விடலாம். சுமார் நான்கு மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்த டாக்டர் அஞ்சலி பரிந்துரைக்கிறார். இது உங்கள் தலைமுடியில் அதிசயங்களைச் செய்யும் என்று அவர் கூறினார்.