/tamil-ie/media/media_files/uploads/2022/11/lamp-puja_759_getty-images.jpg)
karthigai deepam 2022
கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த வருடம் திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) கொண்டாடப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/diwali-decor_759_ts.jpg)
பரணி தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன் சன்னிதியிலும் மாலை விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு.
மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகனுக்கு இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
நம் வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.