Advertisment

வீடே மணக்கும் இட்லி பொடி: வெறும் 15 நிமிடங்களில் செய்யலாம்

கறிவேப்பிலை சேர்த்து செய்யும் இந்த இட்லி பொடி சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க

author-image
WebDesk
Nov 22, 2023 07:40 IST
New Update
safar

கறிவேப்பிலை சேர்த்து செய்யும் இந்த இட்லி பொடி சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க

Advertisment

 தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை - அரை கப், கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன், மிளகு - அரை டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 4 பற்கள், பெருங்காயத் தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.

 கறிவேப்பிலை இட்லி பொடி செய்முறை :

வாணலியை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலையை கொட்டி வறுக்கவும். பின்னர் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை கொட்டி வறுங்கள். வறுத்த கறிவேப்பிலையை மிக்சியில் கொட்டி அரைக்கவும். பிறகு அதனுடன் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை பொடி ரெடி. எளிதில் கெட்டுப் போகாத இந்த இட்லி பொடியை சில வாரங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment