ஒரு முறை இதை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ½ டம்பளர் பச்சரிசி
1 வெங்காயம்
கால் ஸ்பூன் சோம்பு
ஒரு கைபிடி அளவு தேங்காய்
3 டேபிள் ஸ்பூன் வெள்ளை ரவை
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: பச்சரிசியை நன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இத்துடன் வெங்காயத்தை சேர்த்து, அதில் சோம்பு, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை பாத்திரத்தில் சேர்த்து, அதில் ரவையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இது மாவு போல் கட்டி பிடிக்கும். அப்போது இதில் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக பிசைந்து, அதை பூரி போல் தேய்த்து, பொறித்து எடுக்க வேண்டும். செம்ம வையாக நெய் பத்திரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“