காய்கறிகளை நறுக்குவது மற்றும் உணவு சமைப்பது மட்டும் கிச்சன் வேலை இல்லை. சமைத்து முடித்து பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும், கிச்சனை சுத்தம் செய்வதும் கூட ஒரு பெரிய வேலைதான்.
எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டிய அவசியமான சமையலறைப் பாத்திரங்களில் ஒன்று நாம் காய்கறிகளை வெட்டும் சாப்பிங் போர்டு. இது மரம் அல்லது பிளாஸ்டிக்கில் இருக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் காய்கறிகளை வெட்டி முடித்த பிறகு சில கறைகள் அதில் ஒட்டிக் கொண்டு தொல்லை செய்யும்.
அந்த பிடிவாதமான கறைகளை எவ்வாறு அகற்றுவது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா பகிரும் சூப்பர் ஹேக்ஸ் இங்கே உள்ளன. அவை உங்கள் சாப்பிங் போர்டை ஒரு நொடியில் சுத்தம் செய்ய உதவும்.
மரப்பலகை சுத்தம் செய்வது எப்படி?
தேவையானவை
சமையல் சோடா
1/2 – எலுமிச்சை
செய்முறை
சுத்தம் செய்ய வேண்டிய சாப்பிங் போர்டில், பேக்கிங் பவுடரை பரப்பவும். அதனுடன் எலுமிச்சை சாற்றை பேக்கிங் சோடாவுடன் கலந்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். எலுமிச்சை தோலைப் பயன்படுத்தி, அழுக்குகளை துடைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவவும். மென்மையான துணியைப் பயன்படுத்தி தண்ணீரைத் துடைக்கவும். உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெயை எடுத்து மெதுவாக பலகையில் தேய்க்கவும். நீங்கள் அதை பின்னர் துடைத்துவிடலாம்.
பிளாஸ்டி போர்டை எப்படி சுத்தம் செய்வது?
தேவையான பொருட்கள்
சமையல் சோடா
உப்பு
1 தேக்கரண்டி - தண்ணீர்
1 டீஸ்பூன் - வெள்ளை வினிகர்
ஸ்க்ரப் பேட்
½ எலுமிச்சை
செய்முறை
சுத்தம் செய்ய வேண்டிய ஒரு சாப்பிங் போர்டில், பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் தண்ணீரைப் பரப்பவும். 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். கலவை காய்ந்ததும், வெள்ளை வினிகரை சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்கு ஸ்க்ரப் பேடைப் பயன்படுத்தி தேய்க்கவும். பின்னர் எலுமிச்சையை பயன்படுத்தி அழுக்குகளை அகற்றவும். எச்சத்தை சுத்தம் செய்ய சூடான நீரைப் பயன்படுத்தவும்.
உங்கள் வெட்டும் பலகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள், அதனால் அவை அழுக்காக இருக்காது என்று பதூரியா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“