அரிசியில் வண்டு இருக்கா? இனி இப்படி ஸ்டோர் செய்து பாருங்க; எத்தனை வருசம் ஆனாலும் கிட்ட வராது!
அரிசியில் வண்டு வராமல் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இதன் மூலம் வீட்டில் இருக்கும் அரிசியை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.
அரிசியில் வண்டு வராமல் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இதன் மூலம் வீட்டில் இருக்கும் அரிசியை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.
வீட்டில் தினசரி உணவு தேவைக்காக அரிசியை மொத்தமாக வாங்கி வைக்கும் பழக்கத்தை பெரும்பாலான குடும்பத்தில் கடைபிடிக்கின்றனர். குறிப்பாக, சுமார் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை வாங்கி ஸ்டோர் செய்து வைப்போம்.
Advertisment
ஆனால், இவ்வாறு மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசியில் அடிக்கடி வண்டு வரும். அது ரேஷன் அரிசியாக இருந்தாலும் சரி; மற்ற கடையில் இருந்து வாங்கிய விலை உயர்ந்த அரிசியாக இருந்தாலும் சரி; வண்டு வருவதை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் குழம்பி இருப்போம்.
ஆனால், சில டிப்ஸை ஃபாலோ செய்வதன் மூலம் அரிசியில் வண்டு வருவதை சுலபமாக நம்மால் தடுக்க முடியும். முன்னதாக, அரிசியில் வண்டு வரும் காரணத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் ஈரக்கையால் அரிசியை எடுக்கும் போது, அதில் வண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, கைகளை நன்றாக துடைத்த பின்னர் அரிசியை எடுக்க வேண்டும். இது தவிர அரிசியில் வண்டு வராமல் தடுப்பதற்கு, சில வரமிளகாய்களை அரிசியில் வைக்கலாம். இதன் வாசனைக்கு வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் இருக்கும்.
Advertisment
Advertisements
இதேபோல், பிரியாணி இலையையும் அரிசி இருக்கும் டப்பாவில் போட்டால், வண்டுகள் வராமல் இருக்கும். மேலும், 4 அல்லது 5 கிராம்புகளை அரிசியில் தூவி விட்டாலும் வண்டு வராது. இது மட்டுமின்றி, ஒரு சிறிய துணியில் கிராம்புகளை கட்டியும் அரிசி டப்பாவில் போட்டு வைக்கலாம்.
இந்த டிப்ஸை ஃபாலோ செய்வதன் மூலம் அரிசியில் வண்டு மற்றும் பூச்சிகள் வருவதை நம்மால் தடுக்க முடியும்.