ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக சமையல் அறை இருக்கும். சிலரது வீட்டில் பெரிதாக இருக்கும். சிலரது வீட்டில் சிறியதாக இருக்கும். ஆனாலும் எல்லோர் வீட்டிலும் பாத்திரங்கள் மட்டும் அதிகம் இருக்கும். இப்படி இருக்கும் போது சிறிய வீட்டிகளில் இது சிரமத்தை ஏற்படுத்தும்.
Advertisment
அனைத்து பொருட்களையும் வைக்க இடமிருக்காது. இதுவே வாடகை வீடுகளில் சுவரில் ஆணி அடிக்க கூடாது என்று கண்டிஷன்கள் இருக்கலாம். அப்படி இருக்கே ஒரே அறையில் பாத்திரம் வைக்க வேண்டும். ஆனால் அதே சமயம் நல்ல ஆர்கனைஸ்டாக அழகாகவும் வைக்க முடியும். அந்த வகையில் இங்கு சில கிட்சன் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளளது. அதை பார்ப்போம்.
பெரிய சைஸ் பிளாஸ்டிக் பால் கன்டெய்னர் எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தியை தீயில் சூடாக்கி கன்டெய்னரின் நடுவில் சிறிது கேப் விட்டு விட்டு அறுத்துக் கொள்ள வேண்டும். அடி பகுதி வரை நறுக்க கூடாது. பாதியளவு நறுக்கினால் போதும். அதன் பின் அதில் தட்டுகளை அழகாக அடுக்கி வைக்கலாம்.
Advertisment
Advertisement
அடுத்ததாக, கரண்டி, ஸ்பூன் தொங்க விட ஒரு டப்பா எடுத்துக் கொள்ளவும். ஒரு கரண்டியை சூடு செய்து டப்பாவின் மேல் பகுதியில் ஓட்டை போடவும். அடியிலும் 2 ஓட்டை போடவும். அதன் பின் பழைய மெட்டல் வளையல் எடுத்துக் கொள்ளவும்.
இரண்டாக நறுக்கி எஸ் வடிவில் கொக்கி வளைத்து கொள்ளவும். அதன் பின் அதை டப்பாவில் மாட்டி கரண்டியை தொங்க விடலாம். கிட்சனில் இதை ஒரு இடத்தில் தொங்க விட்டுக் கொள்ளலாம்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news