நாம அடிக்கடி வீடு கிளீன் பண்ணும் போது, தேவையில்லாத பொருட்கள்ல வெளியே தூக்கி போடுவோம். ஆனா அதை உபயோகமாக ரியூஸ் பண்ணும் போது நம்ம நிறைய செலவு மிச்சம் பண்ணலாம்.
Advertisment
அரிசிப் பையில இன்ஸ்டண்ட் ஷீட்
நம்ம எல்லார் வீட்டுலயும் அரிசி வாங்குவோம். அரிசி காலியான பிறகு அந்த பைய அப்படியே தூக்கி போட்டுறுவோம்.
இனி அப்படி பண்ணாதீங்க. அரிசிப் பைய இரண்டு பாதியா கட் பண்ணிக்கோங்க. இதை உங்க கிச்சன் ஷெல்ஃப்ல நியூஸ் பேப்பர்க்கு பதிலா விரிக்க யூஸ் பண்ணிக்கலாம். இதுக்காக நீங்க கடையில ஷீட் வாங்கணும் தேவையில்ல.
Advertisment
Advertisements
அதேமாதிரிஃபிரிட்ஜ் ஷெல்ஃப்ல விரிக்கவும் இந்த அரிசிப் பை ஷீட் யூஸ் பண்ணிக்கலாம்.
கேஸ் அடுப்புல குழம்பு, பொறியல் ஏதாவது சமைக்கும் போது கரண்டிய அப்படியே அடுப்பு மேலேயே வச்சுருவோம். இதனால அடுப்பு ரொம்ப அழுக்கா இருக்கும். இந்த அரிசிப் பைய அடுப்பு பக்கத்துல விரிச்சு வச்சுக்கிட்டா கரண்டிய எல்லாம் அதுல வச்சுக்கலாம். அழுக்காகும் போது இந்த ஷீட் மட்டும் துடைச்சுக்கலாம்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு தேய்க்கும் போது இந்த ஷீட் அடியில விரிச்சு, அதுக்கு மேல சப்பாத்திக் கட்டை வச்சு தேய்ங்க. இதனால எல்லாப் பக்கமும் மாவு சிதறாம இருக்கும்.
அதே மாதிரி சப்பாத்தி, பூரிக்கு தேய்ச்ச மாவை நியூஸ்பேப்பர்ல வைப்போம். ஆனா, இனி இந்த ஷீட்ல நீங்க வைக்கலாம்.
இட்லி மாவு ஈஸியா அரைக்கலாம்
தோசைக்கு மாவு ஆட்டுறது பெரிய வேலை. அரிசிக்கு தனியா உளுந்துக்கு தனியா ஆட்டனும். ஆனா அரிசி, உளுந்து சேர்ந்தே ஆட்டி பஞ்சு மாதிரி இட்லி செய்யலாம்.
ஒரு அகலமான பாத்திரத்துல தேவையான அளவு அரிசி எடுத்துக்கோங்க. அடுத்து அரிசி எடுத்த அதே ஆழாக்கு அல்லது கப்-ல உளுந்து எடுத்துக்கோங்க. 4 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து எடுக்கணும். இதுக்கூட ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நல்ல தண்ணீர் ஊத்தி 4, 5 தடவ கழவணும். நல்ல கழுவுன அப்புறம் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைங்க.
அடுத்து அரிசி எடுத்த அதே கப்-ல பாதியளவு அவல் எடுத்து நல்ல கழுவி, அரிசி அரைக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஊறவைங்க.
இப்போ கிரைண்டர்ல ஊறவைச்ச அரிசி, உளுந்து போட்டு அரைங்க. ஊறவைச்ச தண்ணீர்ல அரைக்காம, நல்ல தண்ணீர் சேர்த்து அரைக்கணும். இதுக்கூட ஊறவைச்ச அவல் தண்ணீர் வடிகட்டி சேர்த்துகோங்க. அடிக்கடி கிரைண்டர்ல கைய வச்சு மாவை தள்ளிவிடுங்க. அப்போதான் எல்லாம் சமமா அரைபட்டு வரும். அரைக்கும் போது, தண்ணீரை ஊத்தாம, தெளிச்சு தெளிச்சு விடணும்.
மாவு ரொம்ப கொரகொரன்னும், மையாவும் அரைக்காம ரவை பதத்துக்கு வர்ற மாதிரி அரைக்கணும். இதுக்கூட தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. ரெண்டு நிமிஷம் நல்ல அரைச்சுக்கோங்க. அரைச்சதுக்கு அப்புறம் இந்த மாவை வேற பாத்திரத்துக்கு மாத்திறலாம். இதை எட்டு மணி நேரம் வச்சிருந்தா மாவு நல்ல புளிச்சிருக்கும். ஒரு கரண்டிய வச்சு மாவை நல்லா மிக்ஸ் பண்ணிருங்க.
அடுப்புல இட்லிச் சட்டி வச்சு தண்ணீர் ஊத்தி கொதிச்சதும், இட்லித் தட்டுல, எண்ணெய் தடவி மாவு ஊத்தி வேக வச்சா, பஞ்சு மாதிரி இட்லி ரெடி.
இந்த மாவுலயே தேவையான அளவு தண்ணீர் ஊத்தி, மொறுமொறுன்னு தோசையும் சுடலாம்.