தண்ணீரில் ஊற வைத்து... அரை கிலோ பூண்டையும் ஈஸியா உரிச்சுத் தள்ள வழி இருக்கு!
பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு தெரியும்.. அதிலும் அதன் பசை நகங்களில் ஒட்டிக் கொண்டு உரிக்க முடியாமல் தொந்தரவு செய்யும்..
பெரும்பாலான இந்திய உணவுகளுக்கு பூண்டு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது. இது உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளன.
Advertisment
சந்தையில் பூண்டு மலிவு விலையில் கிடைக்கும் போது மொத்தமாக வாங்கி வீட்டில் சேமித்து வைப்போம். ஆனால் அதை அப்படியே வைக்கக் கூடாது, இதனால் ஒவ்வொரு முறை தோல் உரிக்கும் போது சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் பூண்டு சொத்தையாகி விட்டால் தெரியாது. எனவே பூண்டு வாங்கி வந்தவுடன் அதை உடைத்து தோல் உரிக்காமல் தனித்தனி பல்லாக சேமித்து வைக்கலாம். இப்படி வைக்கும் போது பூண்டு ரொம்ப நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.
அதைப்போல் பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது தினசரி சமைப்பவர்களுக்கு தெரியும்.. அதிலும் அதன் பசை நகங்களில் ஒட்டிக் கொண்டு உரிக்க முடியாமல் தொந்தரவு செய்யும்..
ஆனால் 10 நிமிடத்தில் அரை கிலோ பூண்டை உரிக்க ஒரு எளிதான குறிப்பு இங்கே உள்ளது.
ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் நீங்கள் பூண்டு பற்களை போடுங்கள். ஒரு 10 நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி செய்வதால் பூண்டின் தோல் மென்மையாகி நீங்கள் தோல் உரிக்கும் போது எளிதாக வந்துவிடும். இந்த வழியில் எவ்வளவு பூண்டு வேண்டுமானாலும் விரைவில் உரித்து விடலாம்.
இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. நீங்கள் சாதரணமாக பூண்டு உரிக்கும் போது அதன் தோல் காற்றில் பறந்து வீடு முழுவதும் பரவும். ஆனால் இப்படி கிண்ணத்தில் ஊற வைத்து உரிப்பதால் தோல் பறக்காது. அந்த தண்ணீரிலேயே தோலை போட்டுவிடலாம்…
என்ன சிம்பிளாக இருக்கிறதா? அடுத்தமுறை பூண்டு தோல் உரிக்கும் போது இந்த குறிப்புகளை மறக்காம டிரை பண்ணுங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”