ஃப்ரிட்ஜே வேண்டாம்... காய்கறிகளை ஒரு வாரம் வரை ஃப்ரெஷா வச்சிருக்க இதைப் பண்ணுங்க!
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள்.
Advertisment
இருப்பினும், சமைப்பது என்பது காய்கறிகளை வெட்டுவது மற்றும் உணவு தயாரிப்பது மட்டுமல்ல, அது அதையும் தாண்டி, பொருட்கள் மற்றும் உணவை புதியதாக வைத்திருப்பதையும் உள்ளடக்கியது.
எனவே, நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
காய்கறிகள் சேமிக்க
Advertisment
Advertisements
நாம் என்னதான் பார்த்து பார்த்து சேமித்தாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் காய்கறிகள் சீக்கிரம் அழுகிவிடும். ஆனால் இனி அப்படி நடக்காது. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளும், உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து, பிறகு ஒரு காட்டன் துணியை கொண்டு ஈரம் இல்லாமல் துடைக்கவும். இப்படி செய்வதால், ஒரு வாரம் ஆனாலும் காய்கறிகள் புதிது போல இருக்கும்.
தக்காளி சேமிக்க
தக்காளி வாங்கி வந்த உடன் அதன் காம்பு பகுதியில் ஒரு சொட்டு நெய் தடவி விடவும். நெய் தடவியபகுதி அடியில் இருக்குமாறு அதை அடுக்கி வைத்துவிட்டால் போதும். இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வெளியில் வைத்தாலே ஒரு வாரம் வரையில் தக்காளி புதிதாக இருக்கும்.
பூண்டு
பூண்டு வாங்கி வந்த பிறகு, அதை ஒவ்வொரு பல்லாக பிரித்து காய வைத்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு பூண்டு சொத்தையாகாமல் இருக்கும். இதே போல தான் சின்ன வெங்காயமும் தனியாக பிரித்து காய வைத்தால் நீண்ட நாட்கள் வெங்காயம் அழுகாமல் இருக்கும்.
உருளைக் கிழங்கு
உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. குளிர்ந்த, நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும். அதிக வெப்பநிலை அடையும் அல்லது சூரிய ஒளி படும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும்.
துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை சேமிப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த வழி. உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் கெடுதலை ஊக்குவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“