சமையலறை என்பது வீட்டின் இதயம். அங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சுத்தமாக இருப்பது அவசியம். குறிப்பாக, எண்ணெய் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது என்பது பொதுவாக ஒரு கடினமான வேலை. எண்ணெய் ஸ்டோர் செய்யும் ஜாடிகள், தூக்கு கிளாஸ் ஆயில் டிஸ்பென்சர்கள் போன்ற பாத்திரங்கள் நாளடைவில் பிசுபிசுப்புடன், அழுக்காகக் காட்சியளிக்கும். இந்தக் கறைகளைப் போக்க நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டாம். உங்களிடம் அரிசி மாவு இருந்தால் போதும், நொடிகளில் பாத்திரங்களைப் பளபளப்பாக்கலாம்!
எப்படிச் செய்வது?
Advertisment
உங்கள் எண்ணெய் ஜாடி, ஆயில் டிஸ்பென்சர், அல்லது எண்ணெய் கறை படிந்த தூக்கு கிளாஸ் எதுவாக இருந்தாலும், அதன் மேல் சிறிதளவு அரிசி மாவை நன்கு தூவவும்.
அரிசி மாவு, எண்ணெய் படிந்த மேற்பரப்பு முழுவதும் பரவுவதை உறுதி செய்யவும்.
Advertisment
Advertisements
சில நிமிடங்கள் அப்படியே விடவும். அரிசி மாவு, எண்ணெய்ப் பிசுக்கை உறிஞ்சத் தொடங்கும்.
பிறகு, ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது சுத்தமான துணியை எடுத்து, மாவு தூவிய பகுதியை மெதுவாகத் துடைக்கவும்.
என்ன நடக்கும்?
அரிசி மாவுக்கு எண்ணெய்ப் பிசுக்குகளை உறிஞ்சும் சக்தி அதிகம். இது பிசுபிசுப்பான எண்ணெய்ப் படலத்தை முழுமையாக உறிஞ்சி, அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது. நீங்கள் துடைக்க ஆரம்பித்த உடனேயே, எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் அரிசி மாவுடன் சேர்ந்து வெளியேறுவதைக் காணலாம். உங்கள் சமையலறைச் சாதனம் புதியது போல பளபளப்பாக மாறிவிடும். இந்த எளிமையான முறை, உங்களின் கடினமான சமையலறை சுத்தம் செய்யும் வேலையை மிகவும் இலகுவாக்கும்.
கண்டிப்பாக இதை ஒருமுறை முயற்சித்துப்பாருங்கள். நம்ப முடியாத இந்த மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!