/tamil-ie/media/media_files/uploads/2022/02/chilli-powder-1200.jpg)
நீங்கள் சமையலுக்கு பயன்படுத்துவது மிளகாய் தூளா அல்லது செங்கல் தூளா?
சிவப்பு மிளகாய் தூள் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மசாலாப் பொருட்களில் ஒன்று. வண்ணத்தை மேம்படுத்துவது முதல் உணவுக்கு நுட்பமான கிக் சேர்ப்பது வரை, இது உணவின் சுவையை ஒருபடி மேலே உயர்த்துகிறது.
நம் பாட்டிமார்கள் புதிய சிவப்பு மிளகாயை வெயிலில் காயவைத்து, அவற்றைப் பொடி செய்து, சேமித்து வைத்து அடிக்கடி பயன்படுத்திய காலம் உண்டு. ஆனால் இப்போது நாம் வசதிக்காக பாக்கெட் செய்யப்பட்ட மிளகாய் பொடியை நம்பி இருக்கிறோம்.
அப்படி நாம் பயன்படுத்தும் மிளகாய் தூளில்’ சிவப்பு செங்கல் தூள், மணல் அல்லது டால்க் பவுடர் கலப்படம் செய்யப்படுவது உங்களுக்கு தெரியுமா?
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இது உண்மைதான். இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) சிவப்பு மிளகாய் தூளில்’ உள்ள கலப்படத்தை சோதிக்க எளிய சோதனைகளை பகிர்ந்துள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது இங்கே:
*ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
*அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்.
* இப்போது மிளகாய் தூளை ஆராயுங்கள். ஒரு சிறிய அளவு எச்சத்தை எடுத்து உங்கள் கையில் தேய்க்கவும். தேய்த்த பிறகு, கரடுமுரடானதாக உணர்ந்தால், மிளகாய் தூளில் செங்கல் தூள்/மணலில் கலப்படம் செய்யப்படுகிறது. அது சோப்பு மற்றும் மிருதுவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதில் சோப்ஸ்டோன் உள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
Is your Chilli powder adulterated with brickpowder/sand?#DetectingFoodAdulterants_8#AzadiKaAmritMahotsav@jagograhakjago@mygovindia@MIB_India@AmritMahotsav@MoHFW_INDIApic.twitter.com/qZyPNQ3NDN
— FSSAI (@fssaiindia) September 29, 2021
அடுத்தமுறை மிளகாய் தூள் வாங்கும் போது’ உங்களுக்கு சந்தேகம் இருந்தால்’ இந்த சோதனையை முயற்சி செய்து பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.