அடியில் கறைபிடித்த பாத்திரம்; கொஞ்சம் உப்பு போதும்… இப்படி செய்தால் 5 நிமிடத்தில் க்ளீன் பண்ணலாம்!

இந்த எளிய முறையைப் பயன்படுத்தினால் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய், உங்கள் பாத்திரங்கள் பளபளவெனப் புதிது போல் மாறும்.

இந்த எளிய முறையைப் பயன்படுத்தினால் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய், உங்கள் பாத்திரங்கள் பளபளவெனப் புதிது போல் மாறும்.

author-image
WebDesk
New Update
Kitchen utensil cleaning

Kitchen utensil cleaning

உங்கள் ஸ்டீல் கடாய்களின் அடியில் படிந்திருக்கும் பிடிவாதமான கறைகளைக் கண்டால் அலுத்துப் போகிறதா? எவ்வளவோ சோப்பு லிக்விட் மற்றும் ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி தேய்த்தாலும் இந்தக் கறைகள் போவதே இல்லையா? இனிமேல் கவலை வேண்டாம்

Advertisment

இந்த எளிய முறையைப் பயன்படுத்தினால் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய், உங்கள் பாத்திரங்கள் பளபளவெனப் புதிது போல் மாறும்.

தேவையான பொருட்கள்:

பொடி உப்பு - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா (சோடா உப்பு) - 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி

Advertisment
Advertisements

சுத்தம் செய்யும் முறை:

முதலில் கறை படிந்த பாத்திரத்தின் மீது ஒரு ஸ்பூன் பொடி உப்பைத் தூவுங்கள்.
அடுத்து, அதன் மேல் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவைத் தூவுங்கள்.

இப்போது, பாதி வெட்டிய எலுமிச்சை பழத்தை எடுத்து, உப்பு மற்றும் சோடா கலந்த பகுதியின் மீது வைத்து நன்றாகத் தேய்க்கவும். எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு மற்றும் சோடா கலக்கும்போது ஏற்படும் வினை, பிடிவாதமான கறைகளை இலகுவாக்கி நீக்க உதவும்.

சில நிமிடங்கள் தேய்த்ததும், கறைகள் நீங்கி பாத்திரம் புதியது போல் மின்னுவதைக் காணலாம்.

பலன்கள்:

இப்படி சுத்தம் செய்வதால், கறைகளைப் போக்க மணிக்கணக்கில் சிரமப்பட வேண்டியதில்லை. உங்கள் பாத்திரங்கள் எளிதாகவும், விரைவாகவும் பளபளப்பான நிலைக்குத் திரும்பும். இனி உங்கள் வீட்டுப் பாத்திரங்களில் கறை படிந்தால், இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள்; கறைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: