தீராத மூட்டு வலி... கூடவே வீக்கம் பிரச்சனை? இந்த மாதிரி பற்று செஞ்சு தடவுங்க: டாக்டர் ஜெயரூபா

இயற்கை வழிகளில் மூட்டுவலியை கட்டுப்படுத்த முடிந்தாலும், நீடித்த வலி இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனே நம்பகமான நரம்பியல் அல்லது எலும்பியல் நிபுணரை அணுகுவது நல்லது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இயற்கை வழிகளில் மூட்டுவலியை கட்டுப்படுத்த முடிந்தாலும், நீடித்த வலி இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனே நம்பகமான நரம்பியல் அல்லது எலும்பியல் நிபுணரை அணுகுவது நல்லது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

author-image
Mona Pachake
New Update
download (87)

மூட்டுவலி எனும் சொல் கேட்டவுடன் பலருக்கும் முதியவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் இந்நோய் இன்று அந்த வரம்பை கடந்து, 30 வயதிற்குள் உள்ள இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் தாக்கி வருகிறது. உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், மரபணு குறைபாடுகள், நீர்ச்சத்து பற்றாக்குறை போன்றவை இதற்குக் காரணமாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisment

மூட்டுவலிக்கு காரணமான முக்கிய அம்சங்கள்:

• அதிக உடல் எடை காரணமாக மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
• ஹார்மோன் சமநிலை குன்றுவது மூட்டுகளை பலவீனப்படுத்துகிறது.
• மரபணு சார்ந்த பலவீனங்கள் மூட்டு தேய்மானத்தை வேகமாக்குகிறது.
• போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் மூட்டுகளில் உலர்ச்சி ஏற்படுகிறது.
• கால்சியம் குறைவான உணவுப் பழக்கம் எலும்புகளின் வலிமையை குறைக்கிறது.

உணவில் கவனம் – வலியை கட்டுப்படுத்த இயற்கை வழிகள்

மூட்டுவலி இருந்தால் மருந்துகளை நம்புவதற்கு முன் உணவு பழக்கத்தில் மாற்றம் செய்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

• முடக்கத்தான் கீரை, முளைக்கட்டிய பயிறு, பப்பாளி போன்றவை கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை.
• தினசரி நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் மூட்டுகளை நெகிழ்வாக்க உதவும்.
• போதிய அளவு தண்ணீர் குடிப்பது மூட்டுகளில் ஈரப்பதத்தை பேணும்.

Advertisment
Advertisements

வீட்டிலேயே செய்யக்கூடிய மூட்டுவலி பற்று – பாரம்பரிய முறையில் நிவாரணம்

பழமையான சித்த மற்றும் ஆயுர்வேத முறையில் மூட்டுவலிக்குத் தாய்மருந்துகள் பல பரிந்துரைக்கப்படுகின்றன. அதில் ஒன்று மூசாம்பரம், கடுக்காய், வெந்தயம் மற்றும் மஞ்சள் கலவை.

தேவையான பொருட்கள்:

• மூசாம்பரம்
• கடுக்காய்
• வெந்தயம்
• மஞ்சள்

தயாரிக்கும் முறை:

  1. மூசாம்பரத்தை வெண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடுக்காய், வெந்தயம், மஞ்சளுடன் அரைத்து விழுது போல் தயாரிக்கவும்.
  3. ஊறவைத்த மூசாம்பரத்துடன் கலந்து நன்றாக கசக்கவும்.
  4. வெள்ளை துணியில் பொருத்தி மூட்டுகளில் கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
  5. வாரத்தில் 5 நாட்கள் ஒரு மணி நேரம் வைத்த பிறகு கழுவ வேண்டும்.
  6. பின் “மஹாராஜா தைலம்” போன்ற மூட்டு மசாஜ் எண்ணெயைத் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம்.

மருத்துவர் ஆலோசனை அவசியம்

இவ்வாறு இயற்கை வழிகளில் மூட்டுவலியை கட்டுப்படுத்த முடிந்தாலும், நீடித்த வலி இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனே நம்பகமான நரம்பியல் அல்லது எலும்பியல் நிபுணரை அணுகுவது நல்லது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மூட்டுவலி என்பது வயது முதிர்ந்தோருக்கு மட்டுமே அல்ல. இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் இதை கவனத்தில் கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கம், ஒழுங்கையான உடற்பயிற்சி, போதிய நீர் அருந்துதல் போன்ற வழிகளால் மூட்டுகளை பாதுகாப்பது மிக முக்கியம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: