மனிதர்கள் வாழ தகுதியற்றதாக ஆக்கப்பட்டு வரும் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் காட்சிகள் தான் இவை. ஒரு காலத்தில் மீனவ கிராமங்களின் வாழ்வாதாரமாக இருந்த இந்த கொசஸ்தலை ஆறு இன்று எண்ணெய்க் கழிவுகளால் செத்துக் கொண்டிருக்கிறது.
மீன் பிடிக்க செல்லலாமா? வேண்டாமா என தினந்தோறும் ஆலோசிக்கும் நிலையில் இப்பகுதி மீனவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றை நம்பி வாழும் இந்த மீனவர்கள் CPCL தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகளால் தங்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறார்கள். ஆனாலும் குடும்பச் சூழல் காரணமாக சுகாதார ஆபத்துகளையும் மீறி வேலைக்கு செல்வது என்று கிராம கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவது தொடர்கதையாக இருப்பதாக இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“