Advertisment

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா: ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகம்

10 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 5 நபர்களுக்கு மேல் குழுக்களாக வருபவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
kite ca.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் முதல் முறையாக நடைபெற்ற பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழா.  தமிழகத்தின் முதல் பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழா (கைட் கார்ணிவல்) கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

நம் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பட்டத்தினை, இன்றைய தலை முறையினரின் கரங்களில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நிகழ் மீடியா மற்றும் லூனி ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்ட பட்டம் விடும் திருவிழா நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொழில் முறை பட்டம் விடுபவர்களின் பட்ட கண்காட்சி, பட்டம் விடுவதில் மக்களின் பங்கேற்பு, மேஜிக் ஷோ, பொம்மை பட்ட வேடிக்கைகள், பாடகி ஸ்ரீ நிஷா ஜெயசீலன் இசை கச்சேரி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் பல்சுவை உணவு அங்காடிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன.  

kite.jpeg

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் 6 அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ் மீடியா குழுவை சேர்ந்த கார்த்திகா, பிரியங்கா, ஜீவிதா மற்றும் லோனி ஸ்டியோஸ் ஷருஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும், 10 வயதிற்குப்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 5 நபர்களுக்கு மேல் குழுக்களாக வருபவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் 30 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment