ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் கூடிய நட்பு - 26 ஆண்டுகளுக்கு பிறகு நினைவை பகிர்ந்து - பம்பரம்,எறிபந்து, கயிறு இழுப்பது,போன்ற விளையாட்டுகளை காட்சி படுத்தி விளையாடி மகிழ்ந்து சிறார் பருவத்துக்கு சிட்டாய் பறந்த 80கிட்ஸ்.
கோவை அரசு உதவி பெறும் பள்ளியான "மன்ப உல் உலூம்" பள்ளியில் கடந்த 98ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். கோவை கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியாக மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னாள் 98 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் பகுதியில் நடைபெற்றது
/indian-express-tamil/media/post_attachments/56b75bed-af5.jpg)
ஒன்றா
ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்து கட்டித்தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து மாணவர்கள் மேடையி்ல் ஏறி,தங்களது வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அசைபோட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும் விதமாக பம்பரம்,எறிபந்து, கயிறு இழுப்பது,போன்ற விளையாட்டுகளை காட்சி படுத்தியும், விளையாடியும் மகிழ்ந்தனர்.அதே போல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பழைய நினைவுகளை நினைவு படுத்தும் விதமாக,90கிட்ஸ் பெட்டிக்கடை வைத்து அதில் பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கமரக்கட்டு, தேன் மிட்டாய், கடலை பருப்பி, ஆரஞ்சு மிட்டாய், சக்கர மிட்டாய், தேன் மிட்டாய்,ஐஸ் போன்றவற்றை வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil