கோயம்புத்தூர் மக்களின் புகழ்பெற்ற கொண்டாட்டமான “கோவை விழா”, பல்வேறு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழா நகரத்தின் சாரத்தை உள்ளடக்கி அதன் கலாச்சாரம், வளமான பாரம்பரியம் மற்றும் சமூக உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துகிறது.
கோயம்புத்தூர் விழாவின் 17"வது விழா வரும் நவம்பர்"23 முதல் டிசம்பர் 1"ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது கோயம்புத்தூர் தினம் கொண்டாட்டத்துடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது.
இதற்கான லோகோ அறிமுகம் விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோயம்புத்தூர் விழாவில், நகரம் முழுவதும் ஒன்பது நாட்கள் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. குறிப்பாக டபுள் டெக்கர் பஸ், மியூசிக் கச்சேரி, ஆர்ட் ஸ்ட்ரீட், மராத்தான், உணவு விழாக்கள், விளையாட்டு நடவடிக்கைகள், 'கிராஸ்ரூட் மோட்டார்ஸ்போர்ட், குதிரை பந்தயம் நிகழ்வுகள், திறமை நிகழ்ச்சிகள் உணவு திருவிழா என 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன் மற்றும் இணைத் தலைவர் சௌமியா காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு நிகழ்வும் பல்வேறு ஆர்வங்களை ஈடுபடுத்துவதற்கும், கோயம்புத்தூர்களின் தனித்துவமான திறமைகளையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.ரஹ்மான்.