Advertisment

இறந்த கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு சொந்த செலவில் கட்டிடம்; கோவை புதுமைப் பெண்மணி

கோவையில் இறந்த கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டிக் கொடுத்த மனைவி; பொதுமக்கள் பாராட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kovai school

கோவையில் இறந்த கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டிக் கொடுத்த மனைவி

மனைவிக்காக கணவன் தாஜ்மஹால் கட்டியது அந்தக் காலம், இறந்த கணவனுக்காக மனைவி பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூட கட்டிடம் கட்டியது இந்த காலம், கோவையில் வாழ்ந்து வரும் புதுமைப் பெண்மணி.

Advertisment
publive-image

கோவையில் இறந்து போன தனது கணவனின் நினைவு கூறும் வகையில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து உள்ளார் மனைவி மணிமுத்து. ஷாஜகான் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டியது போன்று கணவனுக்காக பள்ளிக்கூடம் கட்டியதாக அப்பகுதி மக்கள் பெண்மணியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: சீர்வரிசையாக கோவையின் அடையாள சின்னங்கள்; காதணி விழாவில் ருசிகரம்

publive-image
publive-image
publive-image

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இறந்து போய் உள்ளார். இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். திடீரென கணவன் இறந்த நிலையில் மணிமுத்து, அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை முன் நின்று நடத்தி வருகிறார்.

publive-image

இந்நிலையில் பட்டணம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டிடம் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். தனது கணவன் நினைவாக மணிமண்டபம் கட்டாமல், பள்ளிக்கூடம் கட்டடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டிக் கொடுக்கலாம் என நினைத்த மணிமுத்து தனது சொந்த செலவில் தனது கணவன் நினைவை போற்றும் விதமாக தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டிடமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

publive-image

இதுகுறித்து பேசிய மணிமுத்து, கணவன் நினைவாக இந்த பள்ளிக்கூடத்தை மாணவர்களுக்கு பயன்படும் விதமாக கட்டிக் கொண்டிருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடமாக இது இருக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி செய்து கொடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பணம் உள்ள பொதுமக்கள் அரசு பள்ளிகளுக்கு இது போன்ற உதவிகளை செய்ய வர வேண்டும். இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்தப் பள்ளி கட்டிடம் வருகின்ற திங்கட்கிழமை அன்று திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment