/indian-express-tamil/media/media_files/JD8lXoJEgyJRrCNlFyS6.jpg)
Relationship with mother ‘complex’ but Kuno’s only cheetah cub has many guardians
தாயின் அன்பு வேண்டுமானால் கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் குனோவின் ஒரே சிறுத்தை குட்டியை முழு வனவிலங்குத் துறையையும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத குட்டிக்கு செப்டம்பர் 24 அன்று ஆறு மாதங்கள் நிறைவடைவதால், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் "குனோவின் எதிர்காலம்" உயிர்வாழ்வதை உறுதி செய்வதில் தங்கள் அனைத்து ஆற்றலையும் செலுத்துகின்றனர்.
இந்த பெண் குட்டி அதன் தாயான நமீபிய சிறுத்தை ஜ்வாலாவால் புறக்கணிக்கப்படுகிறது. குட்டியின் அழுகைக்கு தாய் பதிலளிக்கவில்லை.
‘குட்டியின் உயிர்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். 15 நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றாக சாப்பிடுகிறது. நாங்கள் அதை ஒரு பெரிய வேலிக்குள் மாற்ற எதிர்பார்க்கிறோம், மேலும் ஒரு வருடத்தில், அது சொந்தமாக வேட்டையாட கற்றுக்கொள்ளலாம். அது தாயிடமிருந்து பிரிந்ததால், அதற்கு நேரம் எடுக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்குள் புலி குட்டிகள் தாங்களாகவே வேட்டையாடக் கற்றுக்கொண்ட அனுபவம் எங்களுக்கு உள்ளது’ என்று சீட்டா ஸ்டீரிங் கமிட்டியின் தலைவர் டாக்டர் ராஜேஷ் கோபால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
குட்டியின் தாய் மனிதத் தொடர்பைத் தவிர்ப்பதாக அறியப்படுகிறது, அவள் ஒரு நல்ல வேட்டைக்காரி. கவுரவுடனான இனச்சேர்க்கைக்குப் பிறகு அது நான்கு குட்டிகளை ஈன்றது. கவுரவ், குனோவில் ராக்ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படும் சிறுத்தைகளின் கூட்டணியின் ஒரு பகுதி.
அன்னையர் தினத்தன்று குட்டிகள் பிறந்ததை வனவிலங்கு அதிகாரிகள் வீடியோ வெளியிட்டு கொண்டாடினர். ஆனால் மே 15க்குப் பிறகு வெப்பநிலை 45 டிகிரியைத் தாண்டியது, ஜ்வாலா வேட்டையாடத் தொடங்கியபோது குட்டிகளும் அவளை பின்தொடர்ந்தன, இதனால் அவர்களின் மகிழ்ச்சி குறுகிய காலமே இருந்தது.
மே 22 அன்று, வெப்பநிலை 47 டிகிரியைத் தாண்டியது, மறுநாள் ஜுவாலா தனது முதல் குட்டியை இழந்தது. வெயில் தாங்காமல், மற்ற இரண்டு குட்டிகள் இறந்தன, அதே நேரத்தில் உயிர் பிழைத்த ஒரே குட்டி தன் தாயுடன் நடந்து சென்றது.
கடைசி குட்டி சோர்வு மற்றும் பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டியதால், வனவிலங்கு அதிகாரிகள் அதை மருத்துவ பரிசோதனைக்காக அதன் தாயிடமிருந்து பிரிக்க முடிவு செய்தனர்.
ஜ்வாலா சமீபத்திய வேட்டையில் பிஸியாக இருந்தபோது, ஒரு கால்நடை மருத்துவர் அதீத தைரியத்தில், குட்டியை அதன் தாயின் மடியில் இருந்து எடுத்தார்.
குட்டி நீரிழப்புடன், சுமார் 1.5 கிலோ எடையுடன் இருந்தது, ஆனால் அது ஒரு வாரத்தில் மீட்கப்பட்டது. கடுமையான வெப்பம் காரணமாக, ஜ்வாலாவுடன் மீண்டும் இணைவது தள்ளிப்போனது. ஜூலை 1 ஆம் தேதி, குட்டி ஒரு கூண்டு வேலிக்குள் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது மற்றும் எட்டு நாட்கள் பிரிந்து இருந்ததால், அதன் தாயைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது.
மறுபுறம், ஜ்வாலா குழம்பி போனது, குட்டியை மோப்பம் பிடித்து, தூரமாக சென்று அமர்ந்து கொண்டது. தாய்க்காக அழுது களைத்துப் போன குட்டி, மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களும் அதே காட்சிகள் நிகழ்ந்தன. ஜூன் 4 அன்று, கண்காணிப்புக் குழு கேமராக்களில் பார்த்துக் கொண்டிருக்க, இரண்டு கால்நடை மருத்துவர்களுடன் வேலி இல்லாமல் மீண்டும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அடுத்து நடந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். ஜுவாலா குட்டியை தாக்கியது மற்றும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அப்போது ஒரு மரக்கிளை கேமராக்களை மறைத்ததால், பதற்றம் இன்னும் அதிகமாக இருந்தது, அடுத்து என்ன நடந்தது என்று எங்களால் பார்க்க முடியவில்லை.
எஞ்சியிருக்கும் ஒரே குட்டியை இழந்துவிட்டோம் என்று நினைத்தோம், என்று குனோ பிராந்திய வன அதிகாரி (DFO) பிரகாஷ் குமார் கூறினார்.
பிறகு இரண்டு கால்நடை மருத்துவர்களால் குட்டி காப்பாற்றப்பட்டது, அதன் தாய்க்கு அருகில் ஒரு சிறிய கூண்டில் 30 மீட்டர் வேலியால் பிரிக்கப்பட்டது.
அவர்களின் ஒவ்வொரு அசைவும் ட்ராப் கேமராக்களால் பதிவு செய்யப்படுகிறது, மேலும் அவர்களது உறவு "சிக்கலானது" என்று விவரிக்கப்படுகிறது.
டிஎஃப்ஓ குமார் கூறுகையில், குட்டிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவளிக்கப்படுகிறது. அதன் உணவு "கூடுதல் கவனிப்புடன்" கால்நடை மருத்துவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது அதன் எடை 4 கிலோவுக்கு மேல் உள்ளது. தாயுடனான அதன் தொடர்பை நாங்கள் பார்த்திருக்கிறோம், துரதிர்ஷ்டவசமாக அவர்களைத் தனியாக விட்டுவிட முடியாது. பார்க்க வரும் டாக்டருடன் குட்டி தொடர்பு கொள்கிறது, என்று DFO கூறினார்.
குனோ இயக்குனர் உத்தம் ஷர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், ’குட்டி தன் தாயுடன் எப்படி வேட்டையாடுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்களுக்கு காட்டு அனுபவம் உண்டு. வேட்டையாடக் கற்றுக்கொண்ட இரண்டு அனாதை புலி குட்டிகள் இருந்தன. அவை ஒருபோதும் தங்கள் தாயுடன் இருந்ததில்லை.
தென்னாப்பிரிக்க சிறுத்தை வல்லுநர் அட்ரியன் டோர்டிஃப் கூறுகையில், மனிதனால் வளர்க்கப்பட்ட சிறுத்தைகள் காட்டுக்குள் விடப்பட்டு, வேட்டையாடுவதைக் கற்றுக்கொண்ட பல வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இது ஒவ்வொன்றையும் பொறுத்தது, அவர்களில் சிலர் வேட்டையாடுவதற்கான வலுவான உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர். அவை முதலில் சிறிய இரையை வேட்டையாட வேண்டும், பிறகு பெரியவற்றை நோக்கி செல்ல வேண்டும். இந்த சிறுத்தைகளின் பிரச்சனை என்னவென்றால், சில நேரங்களில் அவை உணவுக்காக மனிதர்களை சார்ந்து இருக்கின்றன. மேலும் ஒரு விரோதமான சூழலில் அவை சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம், என்று டோர்டிஃப் கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, செப்டம்பர் 17 அன்று, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து 20 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவிற்கு மாற்றப்பட்டன. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 6 உயிரிழந்துள்ளன.
Read in English: Relationship with mother ‘complex’ but Kuno’s only cheetah cub has many guardians
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.