Lifestyle news in tamil: சப்பாத்தி செய்யவது என்றாலே சிலருக்கு மிகவும் அலுப்பு ஆகிவிடும். அப்படியே ஒரு வழியாக சப்பாத்தி செய்ய முடிவு செய்தலும், நாம் சுடும் சப்பாத்தி சாஃப்டாக வராமல் கடுப்பேத்தும். சப்பாத்தி செய்வதற்கும், அதை சாஃப்டான முறையில் செய்வதற்கும் இங்கே எளிய செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -1 கப்
மைதா மாவு -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
அகலமான பெரிய பாத்திரம் ஒன்று எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதா மாவு ஆகிய இரண்டையும் அந்த பாத்திரத்தில் கொட்டி நன்றாக பிசைய வேண்டும். அதாவது மாவு நன்றாக சாஃப்டாகும் அதை பிசைய வேண்டும். மேலும் மாவை சாஃப்டாக மாற்ற சிறிதளவு கஞ்சி தண்ணீரை சேர்க்க வேண்டும். இப்போது மீண்டும் மாவை நன்றாக பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை மாவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக பிசைந்த மாவை ஈரத்துணியைக் கொண்டோ அல்லது பாத்திரத்தின் மூடியைக் கொண்டோ மாவை டைட்டாக மூட வேண்டும். அதன் பின் சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மாவை ஊற வைக்கவும். மாவு நன்றாக ஊறிய பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். பின்னர் நீங்கள் விரும்பிய அளவில் அதை தேய்த்து கொள்ளவும். அதன் பின் தோசை கல்லில், மிதமான வெப்பத்தில் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் விரும்பிய குருமாவோடு சேர்த்து ருசிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil