நீங்களும் ஆகலாம் சமையல் வல்லுநர்... இந்த டிரிக்ஸ் மட்டும் தெரிஞ்சா போதும்!

சமைக்கும் பொழுது ஒருசில டிரிக்ஸ்களை ஃபாலோ செய்தால் நீங்களும் சமையல் வல்லுநர்கள் போல் சமைக்கலாம்

சமைக்கும் பொழுது ஒருசில டிரிக்ஸ்களை ஃபாலோ செய்தால் நீங்களும் சமையல் வல்லுநர்கள் போல் சமைக்கலாம்

author-image
WebDesk
New Update
cook

நீங்களும் ஆகலாம் சமையல் வல்லுநர்... இந்த டிரிக்ஸ் மட்டும் தெரிஞ்சா போதும்!

வீட்டில் நம் அம்மாக்களும், பாட்டிகளும் செய்யும் சமையலை நாம் செய்தால் அவர்கள் வைக்கும் அளவிற்கு ருசி இருப்பதில்லை. என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் நாம் நினைக்கும் ருசியில் குழம்பு இருக்காது. சிலர் அதற்கெல்லாம் ஒரு கை பக்குவம் வேண்டும் என்பார்கள்.

Advertisment

பொதுவாக கைப்பக்குவம் என்பது நாம் போடும் மசாலாவின் அளவுகள் தான். என்ன குழம்பிற்கு எவ்வளவு மசாலா போட வேண்டும்? எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கும். அந்த அளவில் செய்தால் குழம்பு சூப்பராக வரும்.

அப்படி நாம் செய்யும் அன்றாட உணவு வகைகளின் சுவைகளை அதிகரிப்பதற்கான எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். ரவை உப்புமா செய்வதற்கு முன்னர் ரவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து வைத்து, பிறகு உப்புமா செய்து பாருங்கள் உப்புமா உதிரி உதிரியாக வரும்.

சிவப்பு முட்டைக்கோஸ் சமைக்கும்போது நீல நிறமாக மாறாமல் இருக்க, வேகவைக்கும் தண்ணீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்துகொண்டால் போதும்.

Advertisment
Advertisements

தேங்காய் சட்னி அரைக்கும்போது புளிக்காத தயிர் சேர்த்து அரைத்தால் வெண்மை நிறமும், மணமும் நிறைந்த சுவையான சட்னி ரெடியாகிவிடும்.

ரவா லட்டு செய்யும்போது ரவையை வறுத்த பின் மிக்ஸியில் பொடி செய்யும்போது இரண்டு டீஸ்பூன் பால் பவுடர் கலந்தால் சுவை நன்றாக இருக்கும்.

மோர்க்குழம்பு தயாரிக்கும்போது, இரண்டு மோர்மிளகாய் வற்றலை வறுத்துக் குழம்பில் சேர்த்தால் மோர்க் குழம்பு வாசனையே நாலு ஊருக்கு மணக்கும்.

குக்கரில் எண்ணெய், தக்காளி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வைத்து எடுத்து அரைத்தால் சுவையான தக்காளித்தொக்கு ரெடி.

வெண்டைக்காயைப் பொடியாக நறுக்கி லேசாக எண்ணெயில் வதக்கி சாட் மசாலா, சில்லி பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து புதுவிதமான ரைத்தா தயார் செய்யலாம்.

வெண்ணைய் வாங்கி வந்ததும் அப்படியே ஃ ப்ரிட்ஜூக்குள் வைத்துவிடாமல் சிறு துண்டுகளாக்கி வைக்கவும். பிரட்டுக்குத் தடவ, பட்டர் தோசை சுட என பல்வேறு சமயங்களில் தேவையான துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டால், மீதி வெண்ணைய் அப்படியே ஃ ப்ரிட்ஜில் பல நாட்கள் வரை கெட்டுப் போகாமலிருக்கும்.

இந்த டிப்ஸ்களை முறையாக கடைப்பிடித்து வந்தால் உங்கள் வீட்டிலே ஓட்டலில் கிடைக்கும் உணவு வகைகள் போன்று சுவையாக உணவுகளை செய்யலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: