/tamil-ie/media/media_files/uploads/2019/07/paruppu-poli-recipe.jpg)
பருப்பு போளி
மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது சாப்பிட வேண்டும் என நாம் அனைவருமே விரும்புவோம். அந்த நேரத்தில் இந்த பருப்பு போளியை செய்து சாப்பிடுங்கள்.
தேவையானப் பொருட்கள்
கடலை பருப்பு - ஒரு கப்
உப்பு - 1/4 tsp
பாகு தயாரிக்க
வெல்லம் - 1 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
மைதா மாவு - 2 கப்
மஞ்சள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/4 tsp
நெய் - 1 tsp
எண்ணெய் - 2 tsp
துருவிய தேங்காய் - 1/4 கப்
வாழை இலை - மாவு திரட்டுவதற்கு ஏற்ப
செய்முறை :
அரை மணி நேரம் கடலை பருப்பை ஊற வைக்க வேண்டும். பின் பருப்புடன் கால் கப் தண்ணீர், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து கரைய விடவும். பின்னர் வடித்துத் தனியாக எடுத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத்தை கொட்டி அதோடு வேக வைத்த பருப்பை நன்கு மசிக்கவும். அதோடு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். வெல்லமும் பருப்பும் நன்கு கலந்து சற்று கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
மென்மையாக இருக்க, மாவில் மஞ்சள், உப்பு நெய் ஊற்றி பிசைந்துகொள்ளவும். அதோடு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு இளகிய பதத்தில் இருக்க வேண்டும்.
பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி ஊற வைக்கவும். அடுத்து வாழை இலையில் எண்ணெய் தடவில் அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து வைத்து உருட்டிக்கொள்ளவும். பின்னர் விரல்களால் தட்டையாக தட்டிக் கொள்ளவும் பின் அதை அப்படியே எடுத்து தோசைக் கல்லில் போட்டு நெய் தடவி வாட்டி எடுக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.