ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்கள் இன்றியமையாதது. அதே அளவுக்கு புருவங்களும், கண் இமைகளும் கூட. கண், புருவம், கண்ணிமைகளுக்காகவே ஆயிரகணக்கான மேக்கப் பிரொடக்ட்ஸ் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் மெலிதான புருவங்கள் இருப்பதால் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்கள் புருவங்களை அடர்த்தியாக மாற்ற பல அழகு தயாரிப்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
Advertisment
இங்கு சித்த மருத்துவர் யோக வித்யா, இயற்கையாகவே அழகான புருவங்களை எப்படி பெறுவது என்பது குறித்து ஆலோசனை தருகிறார்.
புருவத்தில் முடி கொட்டுவதற்கான காரணத்தை முதலில் பார்க்க வேண்டும். பொடுகுத் தொல்லை காரணமாக முடி கொட்டினால், அந்த பாதிப்பு புருவத்திலும் வரும். தலையில் புழுவெட்டு மாதிரி ஃபங்கல் இன்ஃபெக்ஷன் இருந்தால் புருவத்திலும் முடி கொட்டும்.
Advertisment
Advertisements
பூஞ்சை தொற்று அல்லது அலோபீசியா காரணமாக முடி உதிர்வு இருந்தால், இயற்கையாகவே சல்ஃபர் நிறைந்த சிறிய வெங்காயம் அல்லது கந்தகம் உள்ள பூண்டு விழுதை பயன்படுத்தலாம். புருவ முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை கண் இமைகள் மற்றும் புருவங்களில் தடவவும்.
அஞ்சனம்
கரிசாலை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு சித்த மருந்து இது.
கரிசலாங்கண்ணி இலைகளின் சாற்றை எடுத்து, பருத்தித் துணியில் ஏழு முறை தோய்த்து நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, அந்தத் துணியை திரி போல செய்து விளக்கெண்ணெய்யில் எரிக்கவும். மேலே மண்சட்டி வைத்து, அந்த புகையை மண் சட்டியில் சேகரிக்கவும். முன்னதாக மண் பானையில் சோற்றுக் கற்றாழையை ஏழு முறை தேய்த்து காயவைத்து எடுக்கவும்.
இப்போது கரியை விளக்கெண்ணெய்யுடன் கலந்து புருவங்களிலும், கண் இமைகளிலும் தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கண் ஒளி பெறும் மற்றும் கண் நோய்களை குணப்படுத்தும். இதனை செம்பு பாத்திரத்தில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
அதேபோல கருமையான உதடுகளுக்கு புதினா இலை சாற்றை உதடுகள் மேல் தடவலாம், என்று மருத்துவர் யோக வித்யா இந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.