புதினா இலை இருந்தால் போதும்... வீட்டுல பல்லி, பூச்சி தொல்லைக்கு குட்பை சொல்லலாம்; இப்படி யூஸ் செய்து பாருங்க!
வீட்டில் இருக்கும் பல்லி, பூச்சி போன்றவற்றை எப்படி விரட்டலாம் என்று இந்த கிச்சன் டிப்ஸ் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வீட்டில் சுகாதாரத்தை உறுதி செய்து நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
வீட்டில் இருக்கும் பல்லி, பூச்சி போன்றவற்றை எப்படி விரட்டலாம் என்று இந்த கிச்சன் டிப்ஸ் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வீட்டில் சுகாதாரத்தை உறுதி செய்து நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
வீட்டில் இருக்கும் கிச்சனை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாக, தினசரி கிச்சனை சுத்தமாக வைத்திருந்தால் தான், உணவு பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Advertisment
நாம் எவ்வளவு தான் கிச்சனை சுத்தப்படுத்தினாலும் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை எப்படியும் வந்து விடும். இதனை விரட்டுவதற்கு செயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால், அந்த மருந்துகளை சுவாசிக்கும் போது நமக்கும் பாதிப்பு வரக் கூடும். இதை தடுக்க வீட்டிலேயே பூச்சிக் கொல்லி மருந்தை தயாரிக்கலாம்.
அதன்படி, ஒரு இடி கல் எடுத்து அதில் கால் ஸ்பூன் மிளகு, இரண்டு பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக இடிக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளையும் எடுத்து அதனையும் இவற்றுடன் சேர்த்து இடித்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, இந்தக் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் இடிக்க வேண்டும். இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது புதினா, பச்சை மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றின் வாசனை முழுவதும் தண்ணீருடன் சேரும்.
Advertisment
Advertisements
இவை ஊறியதும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டிக் கொள்ளலாம். இத்துடன் ஒரு மூடி அளவிற்கு லைசால் மற்றும் அரை மூடி அளவில் டெட்டால் சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இப்படி செய்தால் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்து தயாராகி விடும்.
இதனை கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை இருக்கும் இடங்களில் தெளிக்கலாம். இதன் வாசனைக்கு அது போன்ற பூச்சிகள் வராது. இந்த தண்ணீரை சுமார் 10 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இதன் மூலம் நம் கிச்சனை சுத்தமாக பராமரிக்க முடியும்.