/indian-express-tamil/media/media_files/2025/06/05/aYAY9ZvzWtIt3iFb86CF.jpg)
Lizard Cockroach repellent Home remedies
உங்கள் வீட்டில் பல்லிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகமா இருக்கா? இனி கவலையே வேண்டாம்! அதிக செலவில்லாமல், 100% இயற்கையான முறையில் இந்த தொல்லையிலிருந்து விடுபட ஒரு அசத்தலான வழி இருக்கு!
தேவையான பொருட்கள்
வெற்றிலை
பூண்டு
வினிகர் (சமையலுக்குப் பயன்படுத்துவது)
தண்ணீர்
பயன்படுத்தாத மாத்திரைகள் (எ.கா: பாராசிட்டமால், டோலோ)
பிஸ்கட்/பிரட் தூள்/கேக் தூள்
பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை
ஒரு இடிக்கல்லில் இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்றாக நசுக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு பெரிய வெற்றிலையைச் சேர்த்து மீண்டும் நன்றாக நசுக்கவும். இதை மிக்ஸியிலும் அரைக்கலாம். இந்த கலவையை ஒரு பவுலில் எடுத்து, சூடான நீரை சேர்க்கவும். பூண்டு மற்றும் வெற்றிலையின் சாறு தண்ணீரில் இறங்க வேண்டும். அதன்பின்பு, சிறிதளவு வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
இரண்டு மணி நேரம் கழித்து, இந்த கரைசலை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். ஸ்பிரே பாட்டில் இல்லையென்றால், சாதாரண பாட்டிலின் மூடியில் ஓட்டைகள் போட்டு பயன்படுத்தலாம்.
இரவு நேரத்தில், சமையலறை வேலைகள் முடிந்ததும், பாத்திரங்களை கழுவிய பிறகு, சிங்க் பகுதியைச் சுற்றிலும் இந்த கரைசலை ஸ்பிரே செய்யவும். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வீட்டிற்குள் வராது. சிங்க் ஓட்டைகளில் பூச்சிகள் வராமல் தடுக்க, ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கலாம். மேலும், சமையலறை கவுண்டர்டாப், டைல்ஸ், கதவு ஓரங்கள், வாஷிங் மெஷின் மற்றும் சிலிண்டர் போன்ற இடங்களைச் சுற்றிலும் ஸ்பிரே செய்யலாம். இதில் எந்தவித ரசாயனமும் இல்லாததால் பாதுகாப்பானது. எறும்புகள் உள்ள இடங்களில் இதை ஸ்பிரே செய்தால், எறும்புகள் உடனடியாக அழிந்துவிடும்.
எலி மற்றும் பல்லி விரட்டி மாத்திரை உருண்டை தயாரிக்கும் முறை
ஒரு பெரிய வெற்றிலையை எடுத்து நன்றாக நசுக்கிக் கொள்ளவும். அதனுடன் பிஸ்கட் தூள், பிரட் தூள் அல்லது கேக் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், பயன்படுத்தாத பழைய மாத்திரைகளை (பாரசிட்டமால், டோலோ போன்றவை) நன்றாக தூள் செய்து, இந்த கலவையுடன் சேர்த்து நன்கு பிசையவும். இதை சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
இந்த உருண்டைகளை இரவு நேரத்தில், எலி மற்றும் பல்லிகள் அதிகம் வரும் இடங்களில் வைக்கவும். குறிப்பாக ஜன்னல் ஓரங்கள், சமையலறையில் உணவுப் பொருட்கள் வைக்கும் இடங்கள், மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றில் வைக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் போதுமானது.
எச்சரிக்கை: வீட்டில் செல்லப் பிராணிகள் அல்லது குழந்தைகள் இருந்தால், அவர்கள் இந்த உருண்டைகளை எடுத்து சாப்பிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும். எனவே, இரவு நேரத்தில் அவர்கள் இல்லாத போது இதை வைத்து, காலையில் அகற்றி விடுவது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.